tamilnadu

img

மேட்டூர் – சென்னைக்கு மருத்துவர்கள் நடைபயணம்

மேட்டூர் – சென்னைக்கு மருத்துவர்கள் நடைபயணம்

சேலம், ஜூன் 12- அரசு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும், என வலியுறுத்தி மேட்டூரிலிருந்து  சென்னைக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவினர் நடைபயணத்தை துவங்கியுள்ளனர். அரசு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றாத தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலும், மருத்துவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும், என வலியுறுத்தியும் அரசு மருத்துவர் களுக்கான சட்டப் போராட்டக்குழுவினர், சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து சென்னை வரை நடைபயணத்தை புதனன்று துவங்கினர். அதன்படி, அரசு மருத்துவர்களுக்கான  சட்டப் போராட்டக்குழுவின் மாநிலத் தலைவர் பெருமாள்  பிள்ளை தலைமையில், மேட்டூர் மருத்துவர் லட்சுமி நர சிம்மனின் நினைவிடத்திலிருந்து நடைபயணம் துவங்கப் பட்டுள்ளது. அப்போது பெருமாள் பிள்ளை பேசுகையில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, கொரோனா காலத்திற்குப் பிறகு மருத்துவர்கள் அவமதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கான அர சாணை எண்:354யை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் மரணமடைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நான்கு ஆண்டு கள் கடந்தும் இதுவரை தமிழக அரசு எந்தவொரு முயற்சி யும் எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லை. எனவே, உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ  பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவர்களின் எண் ணிக்கையை குறைந்தது மூன்று மடங்காக அதிகரிக்க வேண் டும். செவிலியர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்திலிருந்து 80  ஆயிரம் ஆக அதிகரிக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற மருத்துவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தை, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி வந்தவுடன் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற ஒரு மிகப்பெரிய வாக்குறுதியை அளித்திருந்தார் ஆனால், இன்று வரை  அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தவில்லை, என குற்றஞ்சாட்டினார்.