சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில் “தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்” என்கின்ற அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற் படுத்த வேண்டும் என கடந்த 2021 ஆகஸ்ட் 19 ஆம் தேதி யன்று, நீதிபதிகள் கிருபா கரன்-வேல்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவை, ‘‘திரும்பப் பெறுவதாக’’ சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்றுள்ள, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கம் (டியூஜெ) நன்றியினை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: நீதிபதி கிருபாகரன்- வேல் முருகன் அமர்வின் உத்தரவு, தொழிற்சங்க உரிமைகளுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்திற்கும் எதிராக அமைந்துள்ளது என தெளிவாக கூறி, இந்த தீர்ப்பின் சில பகுதி களை திரும்பப் பெறவேண்டும் என்று டி.யூ.ஜெ. உள்ளிட்ட பத்திரி கையாளர்கள் சங்கங்களும், பத்திரிகையாளர்கள் அமைப்பு களும், மூத்த பத்திரிகையாளர் களும் தீர்ப்பு வந்த நாளில் இருந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மார்ச் 16 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ர வர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் பிரஸ் கவுன்சில் அமைப் பது தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்காத நிலை யில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தர வை திரும்பப் பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரி க்கை வைக்கப்பட்டது. தங்கள் வழக்கை ஆரம்பக் கட்டத்தி லிருந்து மீண்டும் விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டு மென நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனர். பின்னர் சேகரன் தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிப்ப தற்காக இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழகத்தின் அனைத்து பத்திரிகையாளர்கள்-சங்கங் கள், அமைப்புகள் சார்பில் வரவேற்பதுடன், பத்திரிகை யாளர்களின், கோரிக்கை களுக்கு, மதிப்பளித்து, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமை யிலான அமர்விற்கு டி.யூ.ஜெ. நன்றி தெரிவித்துக்கொள்கிறது.