போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி வழங்கல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கோவை மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவ லர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் குளிர்ச்சி தரும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே 20 பெண் காவலர்களுக்கு சோலார் தொப்பிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநகர் முழுவதும் உள்ள 290 போக்குவரத்து காவ லர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் தொப்பிகள், வெப்பத்தை தணிக்கும் வகையில் எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், கருப்பு கண் கண் ணாடிகளும், குளிர் மோர் வழங்கப்பட்டது. கோபி இதேபோன்று, ஈரோடு மாவட்டம், கோபி அதன் சுற்றுவட்டார பகுதியில் கடும் வெயிலை பொருட்ப டுத்தாமல் போக்குவரத்தை சீர்படுத்தி பணியாற்றி வரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆலோசனைபடி கோபி காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் போக்குவரத்து காவலர்களுக்கு காகித தொப்பி (கூழ்தொப்பி) வழங்கி காலை, மாலை இரு நேரங்களில் நீர்மோர், ஜூஸ், குளிர் பானம் உள்ளிட்டவை வழங்குவதை தொடங்கி வைத்த னர்.
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
சேலம், மார்ச் 19- சேலம் ரயில் நிலை யம் அருகே இருந்த 100 கிலோ சந்தன மரங்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட தடுப்புச்சுவர் அருகே பழமை வாய்ந்த இரு சந்தன மரங்கள் இருந் துள்ளன. அங்கு அடையாளம் தெரியாத நபர்கள், அடிக் கடி மது அருந்தியும், கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று நள்ளிர வில் இரு மரங்களையும் வெட்டி அருகிலுள்ள தோட்டத் திற்கு எடுத்துச் சென்று, செதுக்கி தேவையான 100 கிலோ சந்தன மரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை வீசி சென்றுள்ளனர். இதனையறிந்த தோட்டக்காரர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்துள் ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, சந்தன மரத்தை வெட்டிச் சென்ற அடை யாளம் தெரியாத நபர்கள் குறித்தும், இது ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததா? அல்லது தனியார் நிலத்தில் இருந்ததா? என்ற கோணத் தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச பென்சனாக ரூ. 9000 பஞ்சப்படி யுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பென்சனர்கள் நலசங்கத்தினர், செவ்வா யன்று பொள்ளாச்சி புளியம்பட்டியில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி யுள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச பென்சனாக ரூ.9000 பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, பொள்ளாச்சியில் இபிஎஸ் 95 பென்சனர் நலச்சங்கத்தினர் பொள்ளாச்சி புளியம்பட்டி டவர் பிஎஃப் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், நலச்சங்கத்தின் அகில இந்திய கவுன்சில் உறுப் பினர் ஏ.ஆர். துரைசாமி, மாவட்டச் செயலாளர் கே. குமாரசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்து: ஒருவர் படுகாயம்
சேலம், மார்ச் 19- சேலத்தில் வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் படு காயமடைந்தார். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கரும் பாலை அருகே திருச்சியிலிருந்து ராயக்கோட்டை நோக்கி சுரேஷ் என்ற ஓட்டுநர் வைக்கோல் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். இதேபோன்று, வெள்ளாளப் பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் நிரப்பி விட்டு வந்த டேங்கர் லாரி, தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று குறுக்கே உள்ளே நுழைந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி, நெடுஞ் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இவ்விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சுரேஷ் படு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல றிந்த கருப்பூர் போலீசார் விரைந்து வந்து, லாரியை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்புறப்ப டுத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.