வாலிபர், மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி உபகரணங்கள் வழங்கல்
கோவை, ஜூன் 2- இருகூர் அரசு பள்ளிகளில் உள்ள 400 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் மற்றும் மாண வர் சங்கம் இணைந்து இலவச பள்ளி உபகரணங்கள் வழங் கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, ஏ.ஜி. புதூர் நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட 3 அரசுப் பள்ளிகளில் பயிலும் 400 மாணவ, மாணவியருக்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து இலவச பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு வாலிபர் சங்க கிளைச் செயலா ளர் பி. கார்த்திக்ராஜா தலைமை வகித் தார். மாணவர் சங்க மாவட்டத் தலை வர் ஜி. அகமது ஜுல்ஃபிகர், வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.மணி பாரதி, சூலூர் ஒன்றியச் செயலா ளர் எஸ். குருசாரதி, மூன்றாம் வார்டு கவுன்சிலர் ஏ. ராஜேஸ்வரி, சிபிஎம் கிளைச் செயலாளர் கே. ராதாகிருஷ் ணன், சிஐடியு மாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வி. விஜய ராகவன், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சுதீன் பாரதி, வாலி பர் சங்க கிளைத் தலைவர் ஆர். நிருபன், மாதர் சங்கப் பொறுப்பாளர் ஜி. மாரி யாயி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.