tamilnadu

img

ரூ.5 ஆயிரம் உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரூ.5 ஆயிரம் உயர்த்தி வழங்க கோரி  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை ரூ.5 ஆயிரம்  ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வகை  மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.