மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு
நாமக்கல், ஜூன் 16 – மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை புதுப்பிக் கும்போது சதவீதம் குறைப்பதைக் கைவிட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் திருச்செங்கோடு தாலுகா மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச் செங்கோடு தாலுகா முதல் மாநாடு ஞாயிறன்று நடைபெற் றது. தாலுகா குழு தலைவர் ஆர்.துரைசாமி தலைமை வகித் தார். பி.பொன்னுசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை ஈரோடு மாவட்டச் செயலாளர் பி.மாரிமுத்து தொடங்கி வைத்தார். சங்கத்தின் வேலை அறிக்கையை தாலுகா குழு செயலாளர் ஆர்.சக்திவேல், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்மொழிந் தனர். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஏ.ரங்க சாமி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டில், மாற்றுத்திற னாளிகள் சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் நிறைவு செய்து உரையாற்றினர். இதில், ஆந்திராவில் வழங்குவது போல் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தின ருக்கும் வீட்டு மனை வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனா ளிகளுக்கு அனைத்து வங்கிக் கிளைகளிலும் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திருச்செங்கோடு ஒன்றியக் குழு தலைவராக துரை சாமி, செயலாளராக உதயகுமார், பொருளாளராக விஜயா ஆகியோரும், எலச்சிபாளையம் ஒன்றியக் குழு தலை வராக செந்தில், செயலாளராக யுவராஜ், பொருளாளராக தங்கமணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மல்ல சமுத்திரம் ஒன்றியக் குழு தலைவராக பொன்னுசாமி, செயலா ளராக வெங்கடாசலம், பொருளாளராக குமுதா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஏராளமான மாற் றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். முடிவில் ஈஸ்வரன் நன்றி கூறினார்.