tamilnadu

img

நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் தூர்வாரும் பணி

நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் தூர்வாரும் பணி

நாமக்கல், ஏப்.20- நாமக்கல் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டு சிறப்பு தூர்வா ரும் திட்டத்தின் கீழ்  பாசன அமைப்புகளை,  ஆதாரங்களை என 23 பணிகள் 68.05 கி.மீ நீளத் திற்கு ரூ.1.64 கோடி மதிப்பில் தூர்வாரப்பட வுள்ளன. நாமக்கல் மாட்டம், இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் கிராமத்தில் உள்ள அத்த னூர் சின்ன ஏரியில் ஞாயிறன்று நீர்வளத் துறை சார்பில் தூர்வாரும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 2025-26 ஆம் ஆண்டு  சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல்  மாவட்டத்தில் 23 பணிகளில் ஆறுகள் மற்றும்  வாய்க்கால்கள் மொத்தம் 68.05 கி.மீ நீளத் திற்கு தூர்வாரும் பணி நடைபெற உள்ளது.  இதையொட்டி அத்தனூர் சின்ன ஏரி வழிந் தோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை நாடா ளுமன்ற உறுப்பினர் கே. ஆர்.என்.இரா ஜேஸ்குமார் துவக்கி வைத்தார். இதில்,  குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் மொத்தம் 7 பணிகள் 24.95 கி.மீ நீளத்திற்கு ரூ.38.50 லட்சத்திலும், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரட்டாறு பகுதியில் மொத்தம் 1 பணிகள் 1.90 கி.மீ நீளத்திற்கு ரூ.8 லட்சத்தில், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன ஆறுகள்-வாய்க்கால்கள் மொத்தம் 6 பணிகள் 17.5 கி.மீ நீளத்திற்கு ரூ.48.15 லட்சத்திலும், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுகள்-வாய்க்கால்கள் மொத்தம் 7 பணி கள் 18 கி.மீ நீளத்திற்கு ரூ.52.60 லட்சத்தில்,  திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட ஆறுகள்-வாய்க்கால்கள் மொத்தம் 2  பணிகள் 6.15 கி.மீ நீளத்திற்கு ரூ.16.50 லட்சத் திலும் தூர்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள் ளது. இந்த பணிகள் முடிவடையும் போது,  அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்  மற்றும் மழை நீர் பாசன வாய்க்கால்களின் மூலம் உரிய நேரத்தில் கண்மாய்கள் மற்றும்  கடைமடை வரை தங்குதடையின்றி சென்ற டையும். மேலும், வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக் கும். நாமக்கல் மாவட்டத்தில் தூர்வாரப்ப டும் பணிகளில் ஒன்றான இராசிபுரம் வட்டம்,  தேங்கல்பாளையம் கிராமத்தில் உள்ள அத்த னூர் ஏரி வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும்  பணி ரூ.5 லட்சத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்க்காலானது 1.50 கி.மீ நீளத்திற்கு  தூர்வாரப்படவுள்ளது. இதன் மூலம் 98.78 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இந்நிகழ்ச்சியில்,  அட்மாக்குழுத் தலை வர்கள் கே.பி.ஜெகநாதன், ஆர்.எம்.து ரைசாமி, அத்தனூர் பேரூராட்சித் தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் கண்ணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே. சாந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.