தொழிலாளர்களை நசுக்கி, கார்ப்ரேட்டுகளுக்கு சலுகை
கார்ப்பரேட் முதலாளிகள் சலு கைகளைப் பெற்று தொழிலாளர் களை நசுக்கிவிட்டுச் செல்வதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் சேலத்தில் நடைபெற்ற மண் டல மாநாட்டில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் குற்றம் சாட்டினார். மோடி அரசின் தொழிலாளர், விவசாயி மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து நாமக் கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்க அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த சேலம் மண்டல மாநாடு சேலம் கோட்டை பகுதி யில் உள்ள மண்டபத்தில் வெள்ளி யன்று நடைபெற்றது. தொமுச நிர் வாகி இரா.பொன்னி பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாநாட்டில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் பேசுகையில், “தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் கார்ப்ப ரேட் முதலாளிகள் தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளை மட் டுமே பெற்று தொழிலாளர்களை வஞ் சித்து வருகின்றனர். வேடந்தாங் கல் பறவைகளைப் போல வந்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டு 5 ஆண்டுக ளில் தொழிலாளர்களை நசுக்கி விட்டு காணாமல் போகும் நிலை நீடிக்கிறது. தொழிலாளர் நலச் சட் டங்களை முறையாக அமல்படுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டிய வேலையை அரசு செய்ய வேண் டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண் டும். பாஜக அரசு ஆளும் மாநிலங்க ளைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவ தில்லை. தொழிலாளர் உரிமையை ஒன்றிய மோடி அரசு பறித்து வரு கிறது” என்றார். தொமுச அகில இந்திய தலை வர் கி.நடராஜன் பேசுகையில், “தொழிலாளர்களுக்கு சம்பந்தமில் லாத தொழிற்சங்க சட்டங்களை புகுத்தி ஒன்றிய மோடி அரசு தொழி லாளர்களின் உரிமையை பறித்து வருகிறது. தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்து 3 குற்றவியல் கொடூர சட்டங்களை யும் திரும்பப்பெற வேண்டும். உயர் கல்வி படித்து தற்போது வேலை வாய்ப்பு இல்லாமல் எண்ணற்ற இளைஞர்கள் சிரமப்பட்டு வருவ தற்கு மோடி அரசு முக்கிய காரணம். கிடைக்கின்ற வேலை அனைத்தும் தனியார் மயமாக இருப்பதால் அங்கு தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது. கார்ப்பரேட் நலனுக்காகவே மோடி அரசு செயல் பட்டு வருகிறது.” என்றார். இந்த மாநாட்டில், தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயம் செய்ய வேண் டும். பொதுத்துறை நிறுவனங்கள் அரசு துறை தனியார் மயமாக்கப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், தேசிய பணமாக்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை முற்றாக கைவிட்டு பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண் டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட் டத் தலைவர் டி.உதயகுமார், மாவட் டப் பொருளாளர் வி.இளங்கோ, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ். சின்னச்சாமி, ஹெச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜா மணி, ஏஐயுடியுசி மாநிலச் செயலா ளர் வி. சிவக்குமார், ஐஎன்டியுசி செக்ரட்டரி ஜெனரல் எம். பன்னீர் செல்வம், ஏஐசிசிடியு மாநிலச் செய லாளர் டி.சங்கர பாண்டியன், எம்எல்எப் மாநிலத் தலைவர் இரா. ஆவடி அந்தரிதாஸ் மற்றும்சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள், முன் னணி ஊழியர்கள் ஆயிரக்கணக் கில் பங்கேற்றனர். ஹெச்எம்எஸ் நிர்வாகி பி.கணேசன் நன்றி கூறி னார்.