tamilnadu

img

வீட்டுமனை பட்டாக்கோரி சிபிஎம் பெருந்திரள் முறையீடு

வீட்டுமனை பட்டாக்கோரி சிபிஎம் பெருந்திரள் முறையீடு

தருமபுரி, மே 15- 3 மாதத்திற்குள் வீட்டு மனைப் பட்டா, நிலப்பட்டா வழங்க வில்லையென்றால், ஆட்சியர் அலு வலகத்தில் குடியேறும் போராட் டம் நடத்தப்படும், என மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டத்தில் மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்கள் கணிசமாக வாழ்ந்து  வருகின்றனர். சிறு, குறு விவசாயி கள், தண்ணீர் இல்லாததால் விவ சாயம் செய்ய முடியவில்லை. நில மற்ற குடும்பத்தினர் வெளி மாநில, மாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். மனைப்பட்டா இல்லாமல், ஒரே வீட் டில் மூன்று குடும்பங்கள் வாழும் நிலை உள்ளது. பென்னாகரம் வட் டம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர். மேலும், விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, புறம் போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வருபவர்க ளுக்கு வீட்டு மனைப்பட்டா  வழங்க வேண்டும். அரசு அறிவித் துள்ள ஆட்சேபனையற்ற புறம் போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் அனைவருக்கும் நிலப்பட்டா வழங்க வேண்டும். வனப்புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் புறம்போக்கு, நீர்பிடிப்பு  இல்லாத நீர் நிலைப் புறம்போக்கு  ஆகிய நிலங்களை வகை மாற்றம்  செய்து பட்டா வழங்க வேண்டும்.  கோவில் நிலங்களில் குடியிருப் போருக்கு பட்டா வழங்க வேண் டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பென்னாக ரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பென்னாகரம் பேருந்து நிலையத்திலிருந்து மக் கள் பேரணியாக சென்று வட்டாட்சி யர் அலுவலகத்தை வந்தடைந்த னர். இதன்பின் நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை வகித்தார். இதில்,  மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செய லாளர் இரா.சிசுபாலன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் வே. விசுவநாதன், ஜி.சக்திவேல், ஒன்றி யச் செயலாளர்கள் ஆ.ஜீவா னந்தம், பி.ஆர்.செல்வம், ஆர்.சக்தி வேல், எம்.தங்கராசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். குமார், வி.ரவி, சி.ராஜி, ஆர்.சின்ன சாமி, கே.அன்பு, என்.பி.முருகன், பி.சக்திவேல், எம்.வளர்மதி உட் பட எண்ணற்ற பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வட்டாட்சியர் பிரசன்னமூர்த்தியை சந்தித்து 2250 மனுக்கள் வழங்கப் பட்டது. அப்போது, செ.முத்துக் கண்ணன் பேசுகையில், மக்களின் வரி பணத்தில் ஊதியத்தை பெறு கின்ற அரசு அலுவலர்கள், மக்கள்  தருகின்ற மனு குறித்து விசாரணை  செய்து, மனுவிற்கு உண்டான தீர்வு  ஏற்படுத்த வேண்டும். மனைப் பட்டா வழங்குவது பிச்சை அல்ல;  அது மக்களின் உரிமை. அதே போன்று மக்களுக்கு தேவையான  உணவு, மருந்து, குடியிருப்பு வழங் குவது அரசின் கடமையாகும். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் உள் ளிட்ட 8 லட்சம் பேருக்கு பட்டா வழங் கப்படும் என தமிழக முதல்வரும், வருவாய்த்துறை செயலாளரும் அறிவித்துள்ளனர். தருமபுரி மாவட் டத்தில் நீண்ட கலமாக வீடு  கட்டி குடியிருப்போர், சாகுபடி செய் வோர் என 25 ஆயிரம் பேர் பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். கொடுக்கப்பட்ட மனுக்களை பரிசீ லனை செய்து, 3 மாத காலத்திற் குள் பட்டா வழங்க வேண்டும்.  இல்லையென்றால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்து வோம், என்றார்.