ஊழல் மனித குல வளர்ச்சிக்கான எதிரி!
லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் கருத்து
நாமக்கல், ஆக.27- ஊழல் என்பது மனித உரிமை மீறல் மட்டுமல்ல; அது மனித குல வளர்ச்சிக்கான எதிரியாகும், என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பி னர் டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித் துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசி புரத்திலுள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா விழிப்பு ணர்வு கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் டாக்டர் யூசுப் கான் தலை மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோக் ஆயுக்தா உறுப் பினர் வீ.ராமராஜ் பேசுகையில், கடந்த 1948 ஆம் ஆண்டு டிச.10 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமை கள் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடு கள் சபையின் சர்வதேச ஒப்பந்த மானது, கடந்த 2005 ஆம் ஆண்டு டிச.14 முதல் நடைமுறைக்கு வந் தது. ஐக்கிய நாடுகள் சபையின் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டு கையொப் பம் செய்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பாது காப்புச் சட்டமும், கடந்த 2013 ஆம் ஆண்டில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டமும் இந்தியாவில் இயற்றப்பட்டது. மனித உரிமை கள் பாதுகாப்புச் சட்டப்படி, வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் தனிமனித கௌரவம் ஆகி யன தனிமனித உரிமைகளாகும். பொது நிதியை ஊழல் மூலம் தனி நபர்கள் அபகரிப்பதால் மக்க ளுக்கான திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டிய அரசின் பணம் திசை திருப்பப்படுகிறது. இதனால், அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளும் சிவில் மற்றும் கலாச்சார உரிமைகளும் பாதிக் கப்படுகின்றன. ஊழல் என்பது தனி மனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த மக்களின் உரிமைக ளுக்கு எதிரான மீறலாகும். ஊழல், சட்டத்தின் ஆட்சி மீது தாக்குதல் நடத்துவதோடு, மக்க ளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சமூ கத்தில் சமத்துவமற்ற நிலையை உருவாக்கி மக்களின் அமைதியை ஊழல் சீர்குலைக்கிறது. ஊழலை ஒழிக்காமல் மக்களிடையே மகிழ்ச் சியையும், உலகில் அமைதியை யும் ஏற்படுத்தி விட முடியாது. ஊழல் தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல, மனித குலத்துக்கு எதி ராக நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகும். லோக்பால் - லோக் ஆயுக்தா வேறுபாடு ஊழல் தடுப்பு காவல் பிரிவால் ஊழல் புகார்கள் மீது நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின் றன. இந்த வழக்குகளை 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன் றிய அரசின் அனைத்து அலுவலர் கள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியா வில் லோக்பால் அமைப்பு உருவாக் கப்பட்டுள்ளது. இதை போலவே, முதல்வர், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாநில அர சின் அனைத்து அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசா ரிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது. லோக் ஆயுக்தா என்றால் ஊழ லுக்கு எதிரான மாநில அளவிலான உயர் விசாரணை அமைப்பாகும். அனைத்து நீதிமன்றங்களிலும் வழக் குகளை சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் வழி முறைக்கான அமைப்பு லோக் அதா லத் ஆகும். லோக் ஆயுக்தா என்ப தற்கும், லோக் அதாலத் என்பதற் கும் உள்ள வேறுபாட்டை அனைவ ரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி யின் அரசியல் அறிவியல் துறை யும், அரிஸ்டாட்டில் மன்றமும் ஏற் பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.