கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கடந்த இரு நாட்களாக லேசான, சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று வெளியானது. இதில் ஆட்சியர் சமீரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆட்சியருடன் அலுவலக தொடர்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆட்சியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் குணமடைந்து மீண்டும் பணிக்கு வரும் வரை, ஆட்சியர் பொறுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் கவனித்துக் கொள்வார் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.