tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கொப்பரை ஏலம் நாமக்கல்

, மார்ச் 28- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர், வெங்கமேட் டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில்,  வியாழனன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. 9 ஆயி ரத்து 275 கிலோ கொப்பரை கொண்டு வரப்பட்டன. அதி கபட்சமாக கிலோவுக்கு ரூ.185.20-க்கும், குறைந்தபட் சமாக ரூ.140.19க்கும், சராசரி யாக ரூ.183.50க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.138.99க்கும், குறைந்தபட் சமாக ரூ.105.99க்கும், சராசரி யாக ரூ.133.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட் சத்து 37 ஆயிரத்து 625க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஏற்காட்டில் கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்காட்டில் கோடைவிழாவுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் 50க்கும் மேற்பட்ட வகைகளில் மலர் நாற்றுகள் நடும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில், மே மாதம் கோடை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சிகள் முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் சுமார் 50 வகையான வண்ண மலர்களுக்கான நாற்றுகளை நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கன் மாரிகோல்டு, டவாப் சால்வியா, ஜீனியா, பெலிசியா, ஆஸ்தர், பிரென்ச் மாரிகோல்டு என பல்வேறு அரியவகை மலர்களை வளர்க்கும் பணிகளில் தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடைவிழாவுக்கான பணிகள் நடைபெற்று வந்தாலும் அண்ணா பூங்கா ரோஜா தோட்டம் ஏரி பூங்கா ஆகிய இடங்களில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்குவது ரம்மியமாக கட்சியளித்து வருகிறது. ஏற்காடு கோடை விழாவை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மலைப்பாதை வழிகளில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.