தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக, கொளுத்தும் வெயிலை சமாளிப்ப தற்காக ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் உதகையில் குவிந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்று லாத் தளமாகும். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேட் டுப்பாளையத்திலிருந்து அடர்ந்த மலைப்பாதை வழியாக,உதகை வரை உள்ள அழகிய மலை முகடுகளையும், இயற்கை காட்சிகளையும், வானுயர்ந்த மலைகளையும், வன விலங்குகளையும், ஆங்காங்கே அழகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்ற வகையில் செல்லும் உதகை மலை ரயிலில் பயணம் செய்ய அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயிறன்று தமிழ் நாடு மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்தனர். மேலும், யுனெஸ்கோ அந் தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய அதிகளவில் ஆர்வம் கட்டி வரு கின்றனர். உதகையிலிருந்து குன்னூர் மேட் டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்து புகைப் படங்களை எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோன்று உதகையில் அமைந் துள்ள சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரி வது வழக்கம். இந்நிலையில், தொடர் விடு முறையை ஒட்டி உதகைக்கு ஏராளமான சுற்று லாப் பயணிகள் வருகை புரிந்த நிலையில், உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக திகழும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையில் சுற்றுலாப் பயணிகள் நனைந்த படியும் சிலர் குடைகளைப் பிடித்தவாறு பூங்காவை கண்டு ரசித்தும், உதகையில் நில விய குளுகுளு காலநிலையை அனுபவித்த னர்.