200 ஏக்கர் நெற்பயிரில் நோய் தாக்குதல்: ஆட்சியர் ஆய்வு
இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தருமபுரி, செப்.9- தருமபுரி மாவட்டத்தில் 200 ஏக் கர் நெற்பயிரில் நோய் தாக்குதல் ஏற் பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் வேளாண் அதி காரிகள் ஆய்வு செய்தனர். அப் போது, உரிய இழப்பீடு வழங்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தருமபுரி மாவட்டத்தில் நல்லம் பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், கடத்தூர், மொரப்பூர், அரூர், பொம் மிடி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிக ளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற் போது, நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதுகு றித்து கடந்த ஆக.28 ஆம் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகாரளித்தனர். குறிப் பாக கடத்தூர், மொரப்பூர், அரூர் பகு திகளில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிரில் நோய் தாக்குதல் ஏற் பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை யடுத்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய நெல் வயலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ், கடத் தூர், மணியம்பாடி பகுதியில் பாதிக் கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், தொடர் மழைப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் காரணமாக, 200 ஏக்கருக்கு மேல் நெற்பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கி, அதில் குறிப் பிட்டுள்ள பூச்சி நோய் மேலாண்மை களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். நோய் தாங்கி வளரும் ரகங்களை பயிர்செய்ய வேண்டும். நோயற்ற விதைகளை பயன்படுத்த வும், வயலில் நீரை வடி கட்ட வேண் டும் (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர), களைகள் மற்றும் மாற்று பயிர்களை அழித்தல் வேண்டும். மேலும், ஸ்ட்ரெப்டோமைசின் சல் பேட் மற்றும் டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி அளித் தல் போன்ற மேலாண்மை முறை களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். மேலும் நெல்லில் பாக் டீரியா இலைக்கருகல் நோய் பாதிப்பு குறித்தும், அதனை கட்டுப் படுத்தும் முறை குறித்தும் தெரிவித் தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கூறுகையில், நெல் பயிரில் நோய் தாக்குதல் குறித்து, விவசாயி கள் கண்டறிந்து தெரிவிக்கும் நிலை உள்ளது. வேளாண் அதிகாரிகள், பாப்பாரப்பட்டி அறிவியல் நிலைய பேராசிரியர்கள், வேளாண் விஞ்ஞா னிகள் களத்தில் சென்று ஆய்வு செய்து, நோய்களை தடுக்கும் பணி யில் தீவிரம் காட்ட வேண்டும். விவசா யிகள் வங்கியில் கடன் வாங்கி நெல் பயிரிட்டுள்ளனர். எனவே, பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.