சேலம் ஐஓசி நிறுவனத்தின் ஊழியர் விரோதப்போக்கு சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சேலம், ஜூன் 12- இந்தியன் ஆயில் நிறுவனத் தின் ஊழியர் விரோதப்போக்கைக் கண்டித்து, சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் வியாழனன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மாமாங்கம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறு வனத்திற்கு சொந்தமான, சமை யல் எரிவாயு நிரப்பும் ஆலை செயல் பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 80 பேர் பணி யாற்றி வருகின்றனர். அவர்களில் 13 பேரை நிர்வாகத்தினர் வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், இங்கு பணியாற்றும் சரத் சந்திரன் என்ற அதிகாரி, தொழி லாளி ஒருவரை தாக்கியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஓசி நிர்வாகத்தினர் மீனா கேஸ் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகளை வழங்கியதால், முறையாக பணி கள் நடைபெறவில்லை. இப்பணி களை ஐஓசி நிர்வாகத்தினர் கண் காணித்து தொழிலாளர்களுக்கு முறையான பணிகளை வழங்க வேண்டும். நிர்வாகத்தினர் தொழி லாளர்களின் பிரச்சினைகளை தொழிற்சங்க தலைவர்களிடம் பேசி தீர்க்க வேண்டும், என வலியுறுத்தி சிஐடியு தலைமையில் தொழிலாளர் கள் வியாழனன்று வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாளொன்றுக்கு 60 டேங்கர் வண்டிகளில் சமையல் எரி வாயு கொண்டு வரப்பட்டு, அதனை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்றும் பணியை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். உரிய நடை முறைகளை ஐஓசி நிர்வாகத்தினர் செய்து தர வேண்டும், என தொழி லாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், பிரச்சனை சம்பந்தமாக தொழிலா ளர் நல அலுவலர்களிடம் நடை பெற்ற பேச்சுவார்த்தைக்கு ஒத்து ழைப்பு வழங்காமல் ஐஓசி அதிகாரி கள் சென்றதால் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். முன்னதாக, இப்போராட்டத் தில் சிஐடியு தமிழ்நாடு பெட்ரோலி யம் கேஸ் ஒர்க் யூனியன் பொதுச் செயலாளர் கே.விஜயன், சேலம் சங்க செயலாளர் குமரன், நிர்வாகி கள் கே.சேகர், ஜவகர், சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.