குழந்தை விற்பனை கும்பல் கைது
சேலம், ஜூன் 23 – மேற்கு மாவட்டங்களில் குழந்தைகளை வாங்கி விற் பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத் தில் காவலர்கள் கைது செய்தனர். சேலம் நகர ஜோதிபட்டியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் 43. இவர் மீது பண மோசடி புகார் தொடர்பாக செவ் வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப் போது, அவர் ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை வாங்கி வந்து சேலத்தில் விற்றதும், அதற்கு அவரது மனைவி நாகசுதா உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் மேலும் விசா ரிக்கையில், குழந்தையை வாங்கி கொடுத்த ஈரோட் டைச் சேர்ந்த பர்வீன் பானு, பத்மாவதி ஸ்ரீதேவி ஆகியோர் சேர்ந்து இதுவரை மோகன்ராஜ் மூலம் மூன்று குழந்தை பெற்று இருப்பதும் மூன்று ஆண்டுகளாக குழந்தை விற் பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனையடுத்து, திங்களன்று மோகன்ராஜ், நாக சுதா, பர்வீன் பானு, பத்மாவதி, ஜனார்த்தனன் ஸ்ரீதேவி ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, தருமபுரி, கிருஷ்ண கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை வாங்கி விற்றது தெரியவந்தது. குழந்தை இல்லாத தொழிலதி பர்களுக்கு குழந்தைகளை ஏழை எளியவர்களிடமி ருந்து சட்ட விரோதமாக வாங்கி பல லட்சங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுக ளில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் இவர்கள் யார் யாருக்கெல்லாம் குழந்தையை விற்பனை செய்தனர் யார் யாரெல் லாம் குழந்தையை வாங்கினர் என்பது குறித்து பட்டி யல் தயார் செய்து போலீசார் வீசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.
முறையற்ற மின்தடை அறிவிப்பால் பல கோடி ரூபாய் இழப்பு
நாமக்கல், ஜூன் 23- நாமக்கல் பகுதியில் முறையற்ற மின்தடை அறிவிப் பால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக டயர் ரீட் ரேடிங் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாமக்கல் பகுதியில் லாரி தொழிலை நேரடியாக வும், மறைமுகமாகவும் சார்ந்து பல்வேறு சிறு, குறு நிறு வனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி பல் லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற னர். இந்திய அளவில் நாமக்கல் பகுதி லாரி தொழி லில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பிற மாவட்டங்களை விட இங்கு கனரக, டாரஸ், எல்பிஜி, ட்ரெய்லர் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் அதிகளவில் உள்ளன. லாரி தொழிலின் முக்கிய அங்கமாக விளங்கும் டயர் ரீட்ரே டிங் தொழில் தமிழகத்திலேயே அதிகளவில் உள்ளது நாமக்கல்லில் தான். லாரி உரிமையாளர்களுக்கு புதிய டயரில் ஆகும் செலவில் மூன்றில் ஒரு பகுதி செல வில் ரீட்ரேடிங் செய்து கொடுத்து லாரி உரிமையாளர் களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. பல்வேறு இடர்பாடுகளால் இந்த தொழில் நலிவடைந்து வரும் நிலையில், நாமக்கல்லில் மின்வாரிய அதிகாரிகள் ஒவ் வொரு முறையும் மாதாந்திர பராமரிப்புக்காக மின்சார நிறுத்தம் செய்யும் பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு பத்தி ரிகைகள் மூலம் அறிக்கை தருகிறார்கள். அதற்கு தகுந் தாற்போல் ரீட்ரேடிங் உரிமையாளர்களும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து சரி செய்யும் பொழுது, திடீரென்று மின் நிறுத்தம் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இச்செயல் பலமுறை நடந்துள்ளது. இதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களையும் இழந்து, பணிமனைகளுக்கு விடுமுறையும் அளித்து செய்த முன்னெச்சரிக்கைகள் வீணாகிறது. இதனால் பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது. இப்படி பணிமனையை நம்பியுள்ள ஆயிரக்கணக் கான லாரி உரிமையாளர்களும் சிரமப்படுகின்றனர். இது ரீட்ரேடிங் தொழிலுக்கு மட்டுமின்றி, லாரி பாடி பில்டிங், லேத் மற்றும் பெயிண்டிங் உள்ளிட்ட இத்தொழிலை சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி கட்டுமானம், கோழிப்பண்ணை, விவ சாயிகள் என பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்சார நிறுத்தத்தை சரியான முறையில் திட்டமிட்டு அறிவிக்காமல், ஒவ்வொரு முறையும் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதால், நாமக்கல் பகுதிக்கு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்புகள் நடக்கி றது. இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி மின் நிறுத்தம் அறிவிக்கும் பொழுது அது முறையாகவும் சரி யாகவும் இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும், என நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் வலியுறுத்தி யுள்ளார்.
மின்சார வசதி வேண்டி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு!
சேலம், ஜூன் 23 – தங்களின் குடியிருப்பு பகுதியில் மின்சார வசதியை ஏற்ப டுத்தித்தர வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பள்ளி மாணவர்கள் பலர் சீருடையுடன் வந்து திங்க ளன்று மனு அளித்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தேக்கல் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டி மலைப்பகுதியில் ஐம் பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு மூன்று தலைமுறைகளாக மின்சார வசதிகள் செய்யப்படவில்லை. மின் இணைப்பு கேட்டு தொடர்ந்து மனுக்கள் அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்வாரிய அதிகாரிகள், பட்டா இருந்தால் மட்டுமே மின் சாரம் வழங்க முடியும் என்று கூறுவதால், பட்டா கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெரும் சிர மங்களை சந்தித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். குறிப் பாக, இந்த கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு நேரங்களிலும், இரவு நேரங் களிலும் விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே படிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆட்சியரை சந் தித்து, தங்கள் பகுதிக்கு மின்சார வசதி செய்துதர வேண் டும் என மனு அளித்தனர்.
தீக்கதிருக்கு நன்கொடை
ஈரோடு, ஜூன் 23- பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தீக்கதிருக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். ஈரோடு மாவட்டம், பெருந் துறை அருகே தாசம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக நிர்மலா பணியாற்றி வந்தார். அண்மையில் இவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா விஜயமங்கலத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, எஸ்.என்.மயில்சாமி, கே.குப்புசாமி, பெரியசாமி, கௌரி சங்கர் மற்றும் நிர்மலாவின் இணையர் தேவேந்திரன் (பிஎஸ்என்எல்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தீக்கதிருக்கு பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் நன்கொடையாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.