tamilnadu

img

கோவையில் பெண்ணின் செயினை பறிக்க முயன்ற 2 பேர் கைது

கோவையில், தனியாக நடைப் பயிற்சி சென்ற பெண்ணின் தங்க செயினை காரில் வந்த பறிக்க முயன்ற நபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், ஜி.வி ரெசிடென்ஸி பகுதியில் நடைப் பயிற்சி செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் பின்னால் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர், கௌசல்யா கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றார். அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்த கௌசல்யா, சிறிது தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார். உடனே, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பான 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

;