பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்பு தினம்
பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அமைப்பு தின விழா, விடுதலை போராட்ட வீரர்கள் நினைவேந்தல் விழா மற் றும் பிஎஸ்என்எல் ஊழிய ரின் பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று நடைபெற் றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 24 ஆவது அமைப்பு தினம், தியாகிகள் மாவீரன் பகத்சிங், சுக தேவ், ராஜ்குரு நினைவு மற்றும் தோழர் சி. சசிக்குமரன் பணி நிறைவு பாராட்டு விழா சிறப் புக்கூட்டம் திங்களன்று கோவை மாவட்டம், ஆர்எச்ஆர் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொதுச் செயலாளர் செல் லப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், பிஎஸ் என்எல் மாநிலச் செயலாளர் எஸ்.மகேஸ்வ ரன், மாநில துணைத் தலைவர் பாபு ராதா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற் றினார். இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்க தென் மண்டல இணைச் செயலாளர் வி. சுரேஷ், கோவை பகுதிச் செயலாளர் துளசி தரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வெங்கட்ராமன், மாவட்டச் செய லாளர் ஏ.குடியரசு ஆகியோர் பங்கேற்றனர்.
தினக்கூலியை உயர்த்தி வழங்க கொசு ஒழிப்பு பணியாளர்கள் கோரிக்கை
தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், என வலியுறுத்தி கொசு ஒழிப்பு பணியாளர்கள் திங்களன்று தருமபுரி மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டத்தில் 200க்கும் மேற் பட்டோர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் கொசு ஒழிப்பு பணியாளராக கடந்த 18 ஆண்டுகளாக மிகக்குறைந்த தின கூலிக்கு (ரூ.370) பணியாற்றி வருகிறோம். மாவட் டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு சுகா தார விழிப்புணர்வும், கொசு ஒழிப்பு, கொசு புகை மருந்து அடித்து பணியை செய்து வரு கிறோம், மேலும், கிராமத்திற்கு சுமார் 30 கிலோ மீட்டர் வரை சென்று இப்பணியை செய்து வரு கிறோம். பேருந்து கட்டணம் ரூ.50 வரை செல வாகிறது. மீதமுள்ள ரூ.320யை வைத்து, இன்றைய விலைவாசிக்கு ஏற்றவாறு எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் முடியவில்லை. அதனால் தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.