tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சைக்கிள் நிறுத்தத்தில் கட்டணக் கொள்ளை

சேலம், ஏப்.28- சேலம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் சைக்கிள் நிறுத்தத்தில் கட்டணக் கொள்ளை நடைபெற்று  வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத் தில் புகாரளித்துள்ளனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம் செயல்படு கிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனி யார் பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்திற்குள், மாநகராட்சிக்கு சொந்தமான மிதிவண்டி நிறுத்தம் (சைக்கிள் ஸ்டாண்ட்) செயல்பட்டு வருகிறது. டெண்டர் விடப்பட்டு ஒரு சைக்கிளுக்கு மாநகராட்சி குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், இந்த சைக்கிள் ஸ்டாண்டில் ஒப்பந்ததாரர் ஒரு நாளைக்கு ரூ.25 கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ச்சியாக இந்த சைக்கிள் ஸ்டாண்டில் கட்டணக் கொள்ளை நடைபெறு வதாக பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சைக்கிள் ஸ்டாண்டில் கொடுக்கப்படும் பில்லில் எந்த தொகையும் குறிப்பிடுவதில்லை. இதனால் மிகப்பெரிய கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது. இப்பிரச்சனையில் மாநக ராட்சி நிர்வாகம் தலையீடு செய்து கட்டண கொள்ளையில் ஈடு படும் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போன மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இது சம்பந்தமாக நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்படும், எனக்கூறி பாதிக்கப்பட்டவர் கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று புகாரளித்தனர்.

கரிசல் குயில் கிருஷ்ணசாமி நினைவேந்தல்

கோவை ஏப்.28– மறைந்த மக்கள் பாடகன் கரிசல் குயில் கிருஷ்ணசாமி நினைவேந்தல் நிகழ்வு கோவையில் தமுஎகச சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமுஎகச மேடைகளில் மக்களின் பாடுகளை பாட்டாக வடித்து, மக்கள் மனங்களை ஈர்த்தவர், கரிசல் குயில் கிருஷ்ணசாமி. இவர் அன்மையில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இடையர்பாளையம் கிளை சார்பில் இசையஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. ஞாயிறன்று கவிஞர் கா.சு.குணசேக ரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மயில்சாமி வர வேற்றார். இதில், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மேட்டூர் வசந்தி, உடுமலை துரையரசன், வெள்ளலூர் இ.வெ. வீரமணி,  தஞ்சை தமிழ்வாணன்,  டி.சுரேஷ் ஆகியோர் பாடல் கள்களை பாடினர். இந்நிகழ்வில், தமுஎகச மாவட்டத் தலை வர் தி.மணி, செயலாளர் அ.கரீம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நகராட்சி தலைவருக்கு குப்பை பார்சல்

கோவை, ஏப்.28– கருமத்தம்பட்டி நகராட்சியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், நக ராட்சி தலைவர் நித்தியா மனோகர் மற்றும் ஆணையர் பார திக்கு குப்பைகளை பார்சலாக எடுத்துவந்து தங்கள் அதி ருப்தியை வெளிப்படுத்தினர்.  கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சி பகுதியில் வீதிகளில் குப்பைகள் குவிந்து, தூய்மைப் பணிகள் முறை யாக நடைபெறவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஜனவரியில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இருப் பினும், பிரச்சினை தொடர்ந்ததால், திங்களன்று பொதுமக்கள் தங்கள் பகுதியிலிருந்து குப்பைகளை சேகரித்து, பரிசு காகிதத்தில் சுற்றி, நகராட்சி தலைவர் மற்றும் ஆணைய ருக்கு வழங்கினர். ஆணையர் பாரதி, குப்பை பார்சலை வாங்க மறுத்து, “வெறுமனே குப்பைகளை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவதால் பயனில்லை. பழைய குப்பை அகற்றும் ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு, புதிய டெண்டர் விடும் பணி நடைபெறுகிறது. விரைவில் நிலைமை சீராகும்,” என் றார். இதேபோன்று நகராட்சி தலைவர் நித்தியா மனோக ரும் விரைவில் சீர் செய்வதாக உறுதியளித்தார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா உதவியாளருக்கு சம்மன்!

கோவை, ஏப்.28– கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை சூடு  பிடித்துள்ள நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளருக்கு சிபிசிஐடியு சம்மன் அனுப்பியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான்,  வாளை யாறு மனோஜ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு விசாரணை பிரிவு, போலீசார் தற்போது ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்வழக்கில் கைதான 12 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டா வது குற்றவாளியான சயானிடம் இரண்டு முறை விசா ரணை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரி கள், கோடநாடு எஸ்டேட் மேலாளர், முன்னாள் அதிமுக நிர்வாகிகள், எஸ்டேட் காவலாளிகள் உள்ளிட்டோரிடம் சிபிசி ஐடி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண் டனர்.   இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். வரும் மே.6 ஆம்  தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் பங்களா வில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் முதல மைச்சர் ஜெயலலிதா அங்கு வரும்போது யார் யாரெல் லாம் அவரை காண வருவார்கள்?  என்பது குறித்தான பல் வேறு விவரங்களை குறித்து விசாரிக்க பூங்குன்றனுக்கு  சிபிசி ஐடி போலீசார் சம்மன் அளித்ததுள்ளதாக கூறப்படுகிறது.

ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்

கோவை, ஏப்.28- தடை செய்யப்பட்ட ஆழியார் ஊட்டுக் கால்வாய்யில் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடும் சிறுவர்கள் உயிரிழப்பு அபா யம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளையே நாடு கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணி கள் சுற்றுலாத் தளங்களில் உள்ள நீரில்  ஆழமோ அளவோ தெரியாமல் குடும்பத்து டன் சில்லென்ற நீரில் குளித்து மகிழ்கின் றனர். இந்நிலையில் ஆழியார் அணை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் காலங் களில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக் கம். இங்குள்ள அணையை சுற்றியுள்ள பகுதி களில் ஆழம் தெரியாமல் இறங்கும் சுற்று லாப் பயணிகள் தங்களது உயிரை இழந்து விடுகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று சென்னை யிலிருந்து வந்த மூன்று மருத்துவக் கல் லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் இறங்கி குளிக்கும் போது உயிரிழந்த நிலையில், சனியன்று ஆழியார் அறிவு திருக்கோவில் எதிரே தடை செய்யப்பட்ட ஊட்டுக்கால்வா யில் சிறுவர்கள் பலரும் டைவு அடித்தும் நீச் சல் அடித்து குளித்து விளையாடினர். கற்கள் பாறைகள் புதைமணல் உள்ளிட்ட பகுதி களை கொண்டுள்ள ஊட்டு கால்வாய் பகுதி யில் 20 அடி உயரத்திலிருந்து சிறுவர்கள் ஆபத்தை உணராமல் டைவு அடித்து குளிக் கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 மருந்துக்கடைகளின் உரிமங்கள் ரத்து

சேலம், ஏப்.28- விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்த 17 மருந்துக் டைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மருந்து விற்பனை கடை கள் உள்ளன. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரை களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதி முறையை மீறி சில மருந்துக்கடைகள் மருந்து களை விற்பனை செய்து வருகின்றன. மேலும், தூக்கம், வலி நிவாரணி மருந்துக ளும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடின்றி எளி தாக கிடைக்கிறது. இதுகுறித்து மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகை யில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 8 சர கங்களில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் நிகழாண்டில் இதுவரை நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறியதாக 17 மருந்துக் கடைகளின் உரிமங் களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். அதேபோல 2 மருந்துக் கடைகளின் உரிமங் கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற மருந் துகளை விற்பனை செய்த மருந்துக்கடை மீது  வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.