துணிச்சலான குழந்தைகளுக்கு விருது தருமபுரி
, ஜூன் 12- துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட, திறமையான குழந் தைகளுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம், என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ‘பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது’ வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகள் மற்றும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப் படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. இவ்விருதினை பெறுவதற்கு, இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விரு துக்கான விண்ணப்பத்தை, குழந்தையோ அல்லது குழந் தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். 2025 ஆம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா: தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு
சேலம், ஜூன் 12- கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பீகார் மாநிலம், பாட்னாவில் தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் 18 வயதுக்குட்டோருக்கான மகளிர் பிரிவில் பங்கேற்ற தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. தமிழக அணி சார்பில் பங்கேற்ற சேலம் வீராங்கனைகள் தான்யா, மோனிகா, சாதனா, கனிஷ்கா ஆகியோருக்கு பாராட்டு விழா, மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ் வில், மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரட் விலை உயர்வு
உதகை, ஜூன் 12- நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கிலோவிற்கு 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை விற்று வந்தது. இதனால் பலரும் அறுவடை செய்யா மல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர். சில இடங்களில் மழைக்கு அழுகியதால் தரம் குறைந்து, உரிய விலை கிடைக்காத சூழல் நிலவியது. இந்நிலையில், தில்லி மற் றும் கர்நாடகா மாநிலம் மாலூர் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வரும் கேரட் வரத்து குறைவு என்பதாலும், உதகை கேரட் வரத்து குறைவு என்பதாலும், தற்போது கேரட் விலை ரூ.50 முதல் ரூ.70 வரை விலை அதிக ரித்துள்ளது.