tamilnadu

img

அகழாய்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

அகழாய்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 4- அகழாய்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என்றும் தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். புதுச்சேரியில் நடை பெற்ற சமூக நல்லிணக்க கலைத் திரு விழாவிற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலர் முனுசாமி தலைமை தாங்கி னார். ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன் வர வேற்றார். சண்முகசுந்தரம், நாகராஜன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். விழாவின் துவக்க நிகழ்ச்சியாக “கீழடிக்குள் சிந்துவும், சங்கமும்” எனும் தலைப்பில், தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உரை யாற்றினார். இந்நிகழ்ச்சி முனைவர் நா. இளங்கோ தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தின் முக்கிய நகரமாக இருந்த காஞ்சிபுரத்தில் அகழாய்வு பணி 1970 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அந்த மாவட்டம், பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. 50 ஆண்டுகள் கடந்தும் இந்த அகழாய்வு பணி அறிக்கை இன்னும் முழுமையாக வெளி யிடப்படவில்லை என்று குறிப்பிட்டார். இந்திய தொல்லியல் துறை சிறு சிறு தகவல்களை மட்டும் வெளியிட்டுள்ளது. தற்போது தான் சென்னை பல்கலைக்கழகம் அந்த ஆய்வறிக்கையை வெளியிடப் போவதாக அறி வித்திருக்கிறது. அகழாய்வு நடந்து 50 ஆண்டுகள் பின்பு இந்த அறிக்கையை வெளியிடுவதால் உண்மைத்  தன்மை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அகழாய்வு பணியில் ஈடுபட்ட அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தற்போது இல்லை. எனவே தான் அகழாய்வு நடந்த உடனே அகழாய்வு செய்த வர்கள் அந்த ஆய்வு அறிக்கை செய்தியை மக்க ளுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 1945 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அரிக்கன்மேடு அகழாய்வு பணியை மேற்கொண்ட மார்ட்டீமர் வீலர், அகழாய்வு பணியை அறிவியல் பூர்வ மாக எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியவர் என்றும், அவரின் கூற்றுப்படி தான் இன்றைக்கு நாம் அகழாய்வு பணியை கடைப்பிடித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். எனவேதான் அகழாய்வு பணியில் ஈடுபடும் அறி ஞர்கள், ஆய்வாளர்கள் உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம் தவிர, அரசியல் நோக்கத்திற்  காக அல்ல எனவும் தெரி வித்தார். முன்னதாக “அன்பே அறமெனெ எழுக” எனும் தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரை யாற்றினார். விழா ஒருங்கி ணைப்பாளர் மணி. கலிய மூர்த்தி தலைமையில், “சாதி மதங்களைப் பாரோம்” என்ற தலைப்பில், பாவலர் சு. சண்முகசுந்தரம் உரை நிகழ்த்தினார். “வெறுப்பின் கொற்றம் வீழ்க” எனும் தலைப்பில், கவிஞர்கள் மு. பாலசுப்ரமணியன், தி. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். கலைமாமணி பொன். சண்முகம் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களின் இசைய ரங்கம், சப்தர் ஹஷ்மி குழு வினரின் இன்னிசையும், கலை மன்னன் கலைக்குழு வினரின் நாட்டுப்புற கலை வடிவங்களின் சங்கம மும், தவில் கலைஞர் வெ.விநாயகம் ஒருங்கி ணைப்பில் தாளக்கருவிக ளின் சங்கமமும் நடை பெற்றது. முனைவர் ஞா. கோபி இயக்கத்தில் யாழ் அரங்கம் வழங்கும் “விழித்துக் கொள் நண்பா” என்னும் சமூக நாடகம் நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை யும், மக்கள் ஒற்றுமையை யும் வலியுறுத்த நடை பெற்ற நிகழ்ச்சிகளை ஆசிரியர் பச்சையம்மாள், உமா அமர்நாத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சமூக நல்லிணக்கை இயக்கம், புதுச்சேரி மாநில ஓய்வூதிய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. ஊழி யர் சங்கம் ஆகிய அமைப்பு கள் இணைந்து இந்தி திருவிழாவை நடத்தின.