tamilnadu

img

சுகாதார நிலையங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமித்திடுக

சுகாதார நிலையங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமித்திடுக

ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேர சமுதாய நல மருத்து வமனைகளில் நிரந்தரப் பணியாளர் களை நியமிக்க வேண்டும் என்று செவிலியர் மாநாடு கோரிக்கை விடுத் துள்ளது. தமிழ்நாடு அரசு பகுதி சுகாதார செவிலியர் மற்றும் மாநகர சுகாதார செவிலியர் சங்கத்தின் 7வது மாநில மாநாடு மற்றும் உலக மகளிர் தின விழா சனியன்று எழும்பூரில் நடை பெற்றது. இதில், யுவின் செயலிக ளில் கர்ப்பிணி குறித்த பதிவு செய் யும் பணிகளை உள்ளீட்டாளர்களை  (டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்)  கொண்டு செய்ய வேண்டும். பணி நேரத்தை காலை 8 மதியம் 3 மணி என மீண் டும் மாற்றியமைக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பகுதி சுகா தார செவிலியர்களுக்கு சமுதாய சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களை முழு விடுப் பாக அறிவிக்க வேண்டும்,  ஆய்வு கூட்டங்களை பணி நேரத்திலேயே முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநாட்டிற்கு மாநி லத் தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சா.டேனியல் ஜெயசிங் தொடக்கவு ரையாற்றினார். மாநில பொதுச்செய லாளர் பெ.திருமகள் வேலை அறிக் கையும், பொருளாளர் சி.சித்ரா நிநி நிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தெ.வாசுகி சிறப்புரையாற்றினார். மாநிலச் செய லாளர் வே. விஜயகுமரன் நிறைவுரை யாற்றினார். சங்கத்தின் மாநில தணிக் கையாளர் எஸ்.தேவி நன்றி கூறினார்.  மாநாட்டில், மாநிலத் தலைவராக பி.ராஜேஸ்வரி, பொதுச் செயலாள ராக டி.செல்வராணி, பொருளா ளராக எஸ்.தேவி உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆலோசனை

திருப்பூர், மார்ச் 22– திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, ஜல்லிப் பட்டி, கரடிவாவி, மடத்துக் குளம், பல்லடம், ஊத்துக் குளி, தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய 9 அரசு மருத் துவமனைகளை மேம்படுத் துவது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற் றது. இந்த மருத்துவமனை களில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மேலும், இந்த மருத்துவமனைகளில் கூடு தல் உபகரணங்கள் மற்றும்  படுக்கை வசதிகள் ஏற்படுத் துவது தொடர்பாக முடிவெ டுக்கப்பட்டது.