tamilnadu

img

கோவையில் மீண்டும் ராகிங் கொடுமை!

கோவை ஆர்விஎஸ் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 2 சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் போலீசார் கைது செய்து செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஆர்விஎஸ் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் ராகிங் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அக்கல்லூரியில், சீனியர் மாணவர்கள், 2-ஆம் ஆண்டு மாணவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கியதில் அம்மாணவருக்கு நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும், அவரது வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்ததாகவும், சீனியர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
இதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராகிங்கில் ஈடுபட்ட 2 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து தாக்கிய புகாரில், சீனியர் மாணவர்கள் 2 பேர் மற்றும் டீக்கடை வேலை பார்க்கும் தனபால் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சீனியர் மாணவர்களையும், தனபாலையும் போலீசார் தேடி வருகின்றனர்.