tamilnadu

img

விபத்து: 5 பேர் படுகாயம் நாமக்கல்

விபத்து: 5 பேர் படுகாயம் நாமக்கல்,

ஜூன் 14- ராசிபுரம் அருகே கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி  எதிரே வந்த லாரி மீது மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர், கர்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை யிலிருந்து கண்டெய்னர் வாகனத்தில் கொரியர் பார்சல் ஏற்றி கொண்டு வெள்ளியன்று திருச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சேலம் - நாமக்கல் தேசிய நெஞ்சாலை, ஆண்டகளூர் கேட் அருகே சனி யன்று அதிகாலை சென்று கொண்டிருக்கும் போது, ஓட்டுநர் மோகன் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நி லையில், அவரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி மாட்டு சாணம் ஏற்றுவதற்காக சேலம் நோக்கி சென்ற லாரியின் மீது மோதியது. இவ்விபத்தில் கண்டெய்னர் லாரியில் வந்த மூன்று  பேரும், எதிரே வந்த லாரியிலிருந்த இரண்டு பேரும் பலத்த  காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்த வந்த ராசிபுரம் காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.