கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 60 ஆண்டு காலமாக விவ சாயி களுக்கு பக்க பலமாகவும், கிராமப்புற பொருளா தாரத்தின் அடித்தளமாகவும் இருந்து வரும் விசைத் தறித் தொழில், தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரக் கூடியதாக ஜவுளித்தொழில் உள்ளது. பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட ஜவுளித் தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் ஆகும். இந்தியாவில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி யில் மராத்திய மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் ஏறத்தாழ 15 மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி இருந்தாலும், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்ளிட்டவை கேந்திரமான பகுதிகளாகும். இந்த வட்டாரத்தில் ஆரம்பம் முதலே ஏற்றத் தாழ்வையும், நெருக்கடியையும் சந்தித்து இந்த தொழில் வளர்ந்து வந்திருக்கிறது. எனினும் 1970 க்கு பிற்பாடு, 1980 ஆம் ஆண்டு காலகட்டம் மிக வேகமான வளர்ச்சியை பெற்ற காலமாக இருந்தது. 1991இல் தாராளமயக் கொள்கைகள் அமலாக்கம் தொடங்கியதற்கு பிறகு, இந்தத் தொழில் தீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.
குறிப்பாக நவீனமயம் அவசியம் என்ற அரசின் பிரச்சாரம், ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்கி ருந்த சாதா விசைத்தறிகளை, நவீனமயப்படுத்து வதற்கு அரசு சில திட்டங்களை அறிவித்தாலும் அது அனைத்து விசைத்தறியாளர்களையும் போய் சேரவில்லை. பெரும்பான்மையினரால் தங்கள் தறி களை நவீனப்படுத்த முடியவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் மூலதனம். அதிநவீன தறி நிறுவு வதற்கு குறைந்தபட்சம் ரூ. 15 லட்சம் முதலீடு தேவை. சராசரியாக 8 அல்லது 12 சாதா தறிகள் வைத்து தறிக்கூடங்கள் நடத்தக் கூடியவர்கள் மொத்த முத லீடு அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரும். அவர்கள் தற்போது வைத்திருக்கக்கூடிய பழைய தறிகளை நீக்கிவிட்டு, ஒரே ஒரு அதிநவீன தறியை நிறுவுவதாக இருந்தால் கூட அவர்களிடம் இருக்கும் மூலதனம் போதாது. பழைய தறிகள் விலை போவதில்லை. இரும்புகளை உடைப்பதற்கு அடிமாட்டு விலைக்கு பழைய தறிகள் வாங்கப்படுகின்றன. 10 பழைய தறி களை விற்றால் கூட நான்கு லட்சம் தான் கிடைக்கும். கிட்டத்தட்ட ரூபாய் பத்து லட்சம் கடன் பெற வேண்டும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதற்கு முன் வருவதில்லை. கடன் பெற்றாலும் இந்த தறிகளை நிறுவி உற்பத்தி செய்யும் துணிகளை சந்தையில் விற்பது சவாலானது. எனவே நவீன மயத்தின் பக்கம் விசைத்தறியாளர்கள் கவனம் செலுத்த முடியவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நவீன விசைத்தறிகள் வசதி உள்ளவர்களால் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில், தற்போது பல்வேறு காரணங்களும் சேர்ந்து கொண்டு, சாதா தறித் தொழில் அடித்தளம் ஆட்டம் கண்டு வருகிறது.
இது பற்றி மங்கலம் வட்டாரத்தில் விசைத்தறி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் சந்தித்து வரும் அனுபவங்கள்:
36 ஆண்டுகள் விசைத்தறி தொழில் நடத்தி வரும் சுல்தான்பேட்டை முத்துக்குமார்: எனது அனு பவத்தில் இப்போது போல் நெருக்கடி நிலையைப் பார்த்ததில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு முதலே விசைத்தறி தொழில் சிரமத்தைச் சந்தித்து வரு கிறது. ஆனால் கடந்த இரண்டு மாத காலத்தில் படு மோசமான நெருக்கடியை சந்தித்து வருகிறோம். நூல் விலை நிலையாக இல்லாமல் ஏற்ற, இறக்க மாக இருப்பது இத்தொழிலை கடுமையாக பாதித்துள் ளது. அதேபோல் இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அனுப்பப்படும் துணிக்கு விலை கிடை க்கவில்லை. அதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டையம்பாளையம் மூர்த்தி: எனது விசைத்தறி கூடத்தில் மொத்தம் 23 தறிகள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1300 மீட்டர் துணி உற் பத்தியாகும். ஆனால் இப்போது 700 முதல் 800 மீட்டர் துணி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தீபா வளி போனஸ் தருவதற்கு ஒரு தொழிலாளி இந்த ஆண்டு எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று கணக்குப் பார்த்தாலே எவ்வளவு உற்பத்தி நடைபெற்றிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள லாம். ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கக்கூடிய தொழிலாளி இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் தான் சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றால் நிலைமை யைப் புரிந்து கொள்ளலாம். அத்துடன் மின் கட்டண உயர்வும் இத்தொழிலை அழிவை நோக்கித் தள்ளக்கூடியதாக உள்ளது. விசைத்தறி தொழிலாளி கோவிந்தராஜ்: நீண்ட காலமாக விசைத்தறியில் வேலை செய்தாகி விட்டது. வேறு வேலைக்குப் போக மாற்றுத் தொழில் தெரி யாது. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கிறோம். ஏற்கெனவே அழிவை நோக்கி இந்த தொழில் போய்க் கொண்டிருந்தது. இப்போது பஞ்சு, நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு இன்னும் அதை வேகப்படுத்தி இருக்கிறது.
விசைத்தறி நாடா பட்டறை நடத்தி வரும் மங்கலம், பொறியியல் பட்டதாரி ஜெயப்பிரகாஷ்: ஏழாண்டு காலமாக விசைத்தறி நாடா பட்டறையில் வேலை செய்கிறேன். எனது அப்பா ஏறத்தாழ 50 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வந்தார். விசைத்தறி தொழில் நன்றாக இயங்கிக் கொண்டி ருக்கும் நிலையில் எங்கள் பட்டறையிலும் வேலை அதிகமாக நடக்கும். நாளொன்றுக்கு 30 பேர் தங்கள் தறி நாடா வேலைக்காக இங்கு வருவார்கள். எங்களுக்கு ஓய்வே கிடைக்காது. ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 10 பேர் வருவதே அரிதாகஉள்ளது. பட்டறைக்கு வரக்கூடியவர்கள், தேவைப்படும் உதிரி பாகங்களை புதிதாக வாங்குவதற்கு பதிலாக பழைய இரும்புக்குப் போடப்படும் விசைத்தறிகளின் தேய்ந்து போன உதிரி பாகங்களையே மாற்றி போட்டுத் தரும்படி கேட்கும் நிலை உள்ளது. ரூ.80 மதிப்புள்ள பொருளுக்குக் கூட இதுதான் நிலை. எங்கள் பட்டறையில் எங்கள் குடும்பத்தினர், உறவினர் என 5 பேர் வேலை செய்வோம். ஆனால் இப்போது வேலை குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் வேலைக்கு வராவிட்டால் கூட சமாளிக்க முடி யாமல் திணறுவோம். ஆனால் இப்போது யாராவது இருவர் விடுமுறை எடுத்தால் பரவாயில்லை என நினைக்கிறோம். விசைத்தறி தொழில் இருக்கிறது என்றால் ஒரு காலத்தில் நம்பி பெண் தருவார்கள். ஆனால் இப்போது தறிக்காரர்கள் என்றால் இந்த பகுதியில் பெண் கிடைக்காது என்று நிலைமை மாறியுள்ளது. 40 ஆண்டு அனுபவ தொழிலாளி ராமசாமி: ஏற்கெனவே மங்கலம் பகுதியில் பல ஆயிரம் தறிகள் குறைந்துவிட்டன. தறியை ஓட்டி லாபம் பார்க்க முடியாது என்ற நிலையில் பழைய இரும்புக்கு உடைக்கும் நிலை உள்ளது. அதுவும் கூட மூன்றாண்டுகளுக்கு முன்பு ரூ.90 ஆயிரத்துக்குப் போனது இப்போது ரூ.40 ஆயிரம்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
32 வருட அனுபவ விஸ்வநாதன்: விசைத்தறி தொழிலுடன், வேறு தொழிலும் சேர்ந்து வைத்திருப்ப வர்கள் தாக்குப்பிடிக்க முடியும். இதை மட்டும் நம்பி இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. விசைத்தறி வைத்திருந்தால் குடும்ப செலவுக்கு ஆகும் என ஒரு குடும்பமே சேர்ந்து பாடுபடுவார்கள். ஆனால் இப்போது குடும்ப செலவுக்கு கூட வருமானம் கிடைக்காத நிலையை நோக்கி விசைத்தறி தொழில் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வேறு தொழிலில் கிடைக்கும் வரு மானத்தையும் இதில் போட்டு சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த காலத்தில் தொழிலை பாதுகாக்க அனை வரும் ஒன்றுபட்டு போராடிய அனுபவம் உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் நிலையில் விசைத்தறி யாளர்களுக்குப் போராடும் அளவுக்குத் தெம்பு இல்லை. நவீனப்படுத்தாததுதான் விசைத்தறி யாளர்களின் பிரச்சனை. தறிகளை நவீனப்படுத்தி னால் உற்பத்தி திறனும் அதிகரிக்கும், உற்பத்தியும் பெருகும் என்று அடுத்தடுத்து வரும்ஆட்சியாளர் கள், அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் ஒரு விசைத்தறிக் கூடத்தில் அதிகபட்ச முதலீடு ரூ.5 லட்சம் இருக்கும். இருக்கும் எல்லா தறிகளையும் விற்று, கடன் வாங்கினாலும் நவீன சூல்ட்ஜர் தறியை வாங்க முடியாது. அது ஒரு தறி ரூ.15 லட்சம் வரும். குடும்பத் தொழிலாக செய்து வரக்கூடிய கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் எப்படி இதை மாற்ற முடியும்? 35 வருடமாக விசைத்தறி உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும் தாவூத்: இதுவரை இந்த மாதிரி நெருக்கடியை நான் சந்தித்தது இல்லை. உதிரி பாகம் விற்பனை வழக்கமாக 100 சதவிகிதம் நடந்து வந்ததென்றால், இப்போது வெறும் 20 சதவிகிதம்தான் வியாபாரம் நடக்கிறது. 80 சதவிகிதம் இல்லை.
கட்டட வாடகை, வண்டி வாடகை, இதர செலவு கள் என கணக்கிட்டால் செலவு குறையவில்லை. ஆனால் அதற்கான வருமானம் இல்லை. இத்தனை காலமாக இந்த வியாபாரத்தில் சம்பாதித்த சேமிப்பை இப்போது செலவிட்டு சமாளிக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். முன்பெல்லாம் கடனுக்கு பொருள் வாங்குவ தென்பதே இருக்காது. கையோடு பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கிச் செல்வார்கள். ஆனால் கடந்த இரண்டு, இரண்டரை மாத காலமாக கடனுக்கு பொருள் வாங்கிச் செல்வோர் அதிகமாகிவிட்டனர். நீண்ட காலமாக எங்களிடம் வியாபாரத் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் உறவினர்கள் போல் பழகிவிட்டோம். எனவே அவர்கள் கேட்கும் போது கடனுக்கு இல்லை என மறுக்கவும் முடியாது. அவர்களும் ஏமாற்றக் கூடியவர்கள் இல்லை. ஆனால் தொழில் இல்லாத நிலையில் அவர்களா லும் கடன் திருப்பித் தர முடியாத நிலை ஏற்படுகிறது. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அபுதாகீர்: மங்கலம் பகுதியில் 12 வருடங்களாக வியாபாரம் செய்து வரு கிறேன். இப்போது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் குறைந்துவிட்டது. மாதம் ரூ.5 ஆயிரம் அளவுக்கு மாத சாமான் வாங்குவோர் தற்போது ரூ.2 ஆயிரம் என்ற அளவில்தான் வாங்குகிறார்கள். அதேபோல் அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்களும் குறைத்துக் கொள்கின்றனர். இதுவரை இந்த நிலை இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக இதைப் போல் சந்திக்கிறேன். ஒருபுறம் விலைவாசி உயர்கிறது. ஆனால் எங்கள் லாபத்தைக் குறைத்து கொண்டு வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். இப்போதெல்லாம் புதியவர்கள் யாரும் விசைத் தறி தொழில் பழக வருவதில்லை. விசைத்தறியாளர்கள் இப்படி நெருக்கடியைச் சந்திக்கும்போது ஜவுளி உரிமையாளர்களுக்கு இதுபோன்ற நிலை இல்லை. அவர்கள் பாவு, நூல் கொடுத்து துணியை நெசவு செய்து வாங்கினாலும் மூன்று, நான்கு மாத கூலி அவர்களிடம் எப்போதும் நின்று கொண்டே இருக்கும்.
இந்த வட்டாரத்தில் விசைத்தறி தொழில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது. ஆனால் இப்போது சந்திக்கும் நெருக்கடி இதுவரை இருந்ததில்லை. 2023ஆம் ஆண்டு நிலைமை மாறும் என்று பலர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஆனால் எப்படி சீராகும் என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பருத்தி நூல் வர்த்தகர் நாகராஜ்: துணி விற்பனை இல்லை. பருத்தி விலை அதிகமாக உள்ளது. நூல் விலை ஏற்ற இறக்கம். இதனால் துணிக்கு உரிய விலை இல்லை. தற்போது 80 சதவிகித நூல் வர்த்த கம் இல்லை. 20 சதவிகிதம் தான் விற்பனை ஆகிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பொருளாதார மந்தம், மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. அபரிமித உற்பத்தி ஒருபுறம், ஏற்றுமதி தேக்கம். இந்த சூழ்நிலை யில் அரசின் ஒத்துழைப்பு இல்லை. இப்போதுள்ள நிலையைப் பார்த்தால் அதிகபட்சம் 2030ஆம் ஆண்டுவாக்கில் இந்த பகுதி யில் இந்த தொழில் இருக்காது என்ற நிலை ஏற்படும். பழைய இரும்புக்குத் தறியை உடைக்கும் நிலை அதி கரித்துவிட்டது. தற்போதைய போக்கைப் பார்க்கும் போது என்ன நடக்கும் என்று கணிக்கவே முடியாத நிலை உள்ளது.
பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யித்து இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்து இடைத்தரகர்களை அனுமதிக்காமல் நேரடியாக தொழில் துறைக்கு வழங்க வேண்டும். இடைத்தர கர்கள் உள்ளே புகுந்து சூதாட்டம் நடத்துவதை தடுக்க வேண்டும். இதைச் செய்தால்தான் ஏற்ற, இறக்கம் இல்லாமல் சீரான முறையில் விலை இருக்கும். கோடங்கிபாளையம் சின்னச்சாமி, ரியல் எஸ்டேட் மகேந்திரன்: இந்த ஆண்டு தீபாவளிக்கு தொழிலாளர்கள் வீட்டுமனை வாங்குவது இல்லை. வழக்கமான வீட்டுமனை வியாபாரத்தில் தற் போது 10 சதவிகிதம்தான் நடைபெறுகிறது. ஏற்கெனவே முதலீடு வைத்து தொழில் செய்வோர் சமாளிக்க முடியும். வங்கிக் கடன், வேறு கடன் வாங்கி இந்த தொழில் செய்வோர் தற்போது தாக்குப்பிடிக்க முடியாது. வீட்டுமனை விற்பனை நடைபெறு வதிலும், வாங்குவோரிடம் பணம் இல்லாததால் வியாபாரம் மிகவும் தாமதமாகிறது. 15 வருட ரியல் எஸ்டேட் வியாபார அனுபவத்தில் தற்போதுள்ள தைப் போல் சந்தித்ததில்லை. இதுபோல் இந்த தொழிலில் உள்ள ஒவ்வொரு வருக்கும் உள்ள அனுபவம் இன்றைய நெருக்கடி யை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆட்டம் காணும் விசைத்தறி தொழிலை நிலை நிறுத்துவதற்கு அரசின் கொள்கை ஆதரவு அவசியம். இது சில ஆயிரம் விசைத்தறியாளர்களுடைய பிரச்சனை மட்டுமல்ல, பல லட்சம் தொழிலாளர்கள், கிராமப்புற மக்களின் வாழ்வும் கூட!
- வே. தூயவன்