tamilnadu

img

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.62 சதவிகிதம் தேர்ச்சி

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.62 சதவிகிதம் தேர்ச்சி

திருப்பூர், மே 16- திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள்  94.62 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் 27  ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருப் பூர் மாவட்டத்தில் 220 மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 783 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 12,224 மாணவர்களில் 11,267 மாணவர்களும், 14,559  மாணவிகளின் 14,074 மாணவிகள் என 25,341  பேர் தேர்வு எழுதியுள்ளனர். 94.62% தேர்ச்சி  சதவீதத்துடன் 8 வது இடமும், 220 பள்ளிகளில்  86 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதேபோல் அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீ தத்தில் 77 பள்ளிகளைச் சேர்ந்த 12,498 மாணவ  மாணவிகள் தேர்வு எழுதியதில் 4712 மாண வர்கள் 6648 மாணவிகள் என 11,360 பேர் தேர்ச்சி பெற்று 90.89 சதவிகிதத்துடன் 9 ஆவது இடம் பெற்றுள்ளது. இதில் 8 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. கடந்தாண்டு 11 ஆம் வகுப்பு தேர்ச்சி சத வீதத்தில் திருப்பூர் மாவட்டம் 3 ஆம் இடம்  பெற்ற நிலையில் தற்போது பின்னுக்கு சென் றுள்ளது.

பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையம் பகுதியில் அமைந் துள்ள, மயானத்தில் புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.