tamilnadu

img

சாலை விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலி

சாலை விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலி

நாமக்கல், ஏப்.24- இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சரக்கு  வாகனம் மீது மோதியதில் கல்லூரி மாணவர் கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட் டில், ஈரோடு சாலையில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் கரூர் மாவட் டம், பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (19), வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி (19) ஆகியோர் பிசிஏ இரண் டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலை யில், பல்கலைக்கழக பருவத் தேர்வு எழுதி விட்டு கரூருக்கு இருசக்கர வாகனத்தில் சென் றுள்ளனர். இருசக்கர வாகனத்தை திருப்பதி ஓட்டியுள்ளார். சித்தாளந்தூர் அருகே காட்டுப் பாளையம் பிரிவு சாலையில் சென்றபோது, எதிரில் வந்த சரக்கு வாகனத்தின் பக்கவாட் டில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதி யதில் மாணவர்கள் இருவரும் நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல றிந்த திருச்செங்கோடு ஊரக காவல் துறையி னர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து,  விசாரித்து வருகின்றனர்.

நூறுநாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அந்தியூரில் கனரா வங்கி முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர்கள் சங்க  தாலுகா தலைவர் ஜி.செங்கோடன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சாவித்ரி, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அண்ணா தொழிற்பேட்டையில் ஆட்சியர் ஆய்வு

கோவை, ஏப்.24– கோவை, கிட்டாம்பாளையத்தில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் 316.04 ஏக்கரில் உருவாகி வரும் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற் பேட்டையின் பணிகள் குறித்து, மாவட்ட  ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கிட்டாம்பாளையத்தில் உருவாகி வரும் இந்த தொழிற்பேட்டையில் முதல் மற்றும்  இரண்டாம் கட்ட மேம்பாட்டு பணிகள் முடிவ டைந்துள்ளன. தற்போது, சாலைகள், சிறு பாலங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கள், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட மூன்றாம் கட்ட மேம்பாட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனை ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தரம் குறித்தும், தொழிற்பேட்டையில் பசுமை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய் வின்போது, தொழிற்பேட்டையின் செயலாட் சியர் கு.சுகந்தி, மேலாளர் ஆர்.சந்திரசேக ரன், டிட்கோ கிளை மேலாளர் சண்முகவடி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதனைத் தொடர்ந்து, சூலூர் வட்டாட் சியர் அலுவலகம், பதிவறை, பொது இ -  சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களை நேரில் பார்வையிட்டார். அங்கு பராமரிக்கப்ப டும் பதிவேடுகள், பொதுமக்கள் மனுக்கள் மற்றும் சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.  மேலும், சூலூர் பேரூராட்சியில் ரூ.3  கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் 40 கடை களுக்கான கட்டிடங்களை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார். அதேபோல், இரு கூர் பேரூராட்சியின் பொன்விழா நகரில் அம் ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.24.51 கோடி மதிப் பில் கட்டப்பட்ட 6 இலட்சம் லிட்டர் கொள்ள ளவுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை யும் ஆய்வு செய்தார். குடிநீர் விநியோக முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட்டு, வீடுகளுக்குச் செல்லும் குழாய் இணைப்பு கள் குறித்தும் விபரங்களை சேகரித்துக் கொண்டார்.