கோவை அரசு கலைக்கல்லூரியின் 170ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியில் சிறந்து விளங்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டப்பட்டது.
இதையடுத்து, சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், கல்லூரியில் கரகாட்டம், சிலம்பம் ஆகியவற்றை மிக சிறப்பாக செய்ததாக பாராட்டினார். இந்த கல்லூரி மாநில அளவில் அதிக மாணவர்கள் பயிலும் முதலிடத்தில் இருக்கும் கல்லூரி எனவும் தெரிவித்தார். கல்லூரி படிப்பை முடித்து சென்றாலும் கல்லூரியின் மீது பெருமை பட வேண்டும். இக்கல்லூரியில் இடவசதி செய்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.