tamilnadu

img

மேட்டுப்பாளையம் : கனமழையால் வீடுகள் இடிந்து விபத்து - 17 பேர் மரணம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானதில் 17  பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்தன. இதில் 2வீடுகளின்  இடிந்து விழுந்தன. அப்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்டுள்ளது.  இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினரும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். 

;