tamilnadu

img

பொள்ளாச்சியில் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு!

பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை தனியார் தோட்டத்தில்  பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடுபட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காளிமுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் வல்லுநர் குழுவை வனத்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் புதருக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பை லாபகமாக மீட்டுனர். பின்பு,  டாப்ஸ்லிப்பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பு விடப்பட்டது.