குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ததில் அநீதி 1லட்சம் துண்டறிக்கை, மார்ச் 18 இல் ஊழியர் கூட்டம்
பல லட்சம் பனியன் மற்றும் பின்னலா டைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்ததில் அநீதி இழைக்கப் பட்டுள்ளது. இது குறித்து ஒரு லட்சம் துண்ட றிக்கைகள் வெளியிடுவது, மார்ச் 18ஆம் தேதி ஊழியர் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங் கள் தீர்மானித்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வா யன்று, அவிநாசி ரோடு சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிஐ டியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி சம்பத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் என்.சேகர், செயலாளர் ஆர்.செந்தில்குமார், எல்.பி.எப் பனியன் சங்க பொதுச் செயலாளர் கா.ராமகிருஷ்ணன், தலைவர் ஜி. பாலசுப்பிர மணியம், பொருளாளர் பூபதி, ஐஎன்டியுசி பனியன் சங்க செயலாளர் அ.சிவசாமி, தலை வர் அ.பெருமாள், ஏடிபி துணைச் செயலாளர் குமார், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர். முத்துசாமி, எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் மு.சம்பத், எம்.எல்.எப் பனியன் சங்க செயலா ளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வருமாறு: பனியன் தொழிலாளர்க ளுக்கு நடைமுறையில் உள்ள சம்பளத்தை விடவும் குறைவாக அறிவித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் பற்றி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 2 டி/எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். நியாயமான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து அறி விப்பு வெளியிட வேண்டும் என அனைத்து சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் அவை குறித்து எந்த ஒரு அறிவியல் பூர்வமான கணக்கீடும் செய்யாமல் அதிகாரிகள் தன் னிச்சையாக, தொழிலாளர்களுக்கு விரோத மான ஒரு குறைந்தபட்ச ஊதிய அரசா ணையை வெளியிட்டுள்ளனர். இதனால் பனி யன் கம்பெனியில் வேலை செய்து வரும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ் வாதாரம் பெருமளவில் பாதிப்புக்குள்ளா கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஊதி யம் குறைவாக உள்ளது, இதை மாதம் ரூ.26 ஆயிரம் என உயர்த்தி வழங்க தொழிற்சங்கங் கள் கோரி வருகின்றன. இந்நிலையில் அரசு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதி யம் அறிவிப்பில் பின்பற்ற வேண்டிய எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றவில்லை. குறைந்தபட்ச ஊதியத்திற்கான குழுக்க ளின் கூட்டம் நடைபெறவில்லை. தொழிற்சங் கங்களிடமும் கருத்து கேட்கவில்லை. தொழி லாளர்களர்களிடமும் கருத்து கேட்கப்பட வில்லை. இப்படி எந்த வகையிலும் கருத்து கேட்காமல் அதிகாரிகள் வெறுமனே அறை யில் உட்கார்ந்து கொண்டு அறிவித்திருக் கும் ஊதியம், ஏற்கனவே தொழிலாளர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட மாதம் ஒன் றுக்கு ரூ.1700 வரை இழப்பு ஏற்படுத்தும். குறைக்கப்பட்ட ஊதியம் ஆகவே தமிழ்நாடு அரசு அறிவித்திருக் கும் அரசாணையை ரத்து செய்துவிட்டு தற் போது உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்திற்கான வழிகாட்டுதலாக சொல்லப்பட்டுள்ள, பொருளாதார அறிஞர் டாக்டர் அக்ராய்டு வழிகாட்டுதலின்படியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் முறை யாக ஊதியம் கணக்கிட்டு அறிவிக்க வேண் டும். ஓராண்டுக்கு முன்பு கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, வெளியிட்ட குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பில், 2010ஆம் ஆண்டு 161 புள்ளிகளுக்கு, மாதம் ரூ.28 அகவி லைப்படி வழங்குவதென தெரிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது வெளியிட்டிருக் கும் அறிக்கையில், தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அகவிலைப்படியைக் கடுமையாகக் குறைத்துள்ளனர். முந்தைய கணக்கீட்டுப்படி தொழிலா ளிக்கு அகவிலைப்படியாக மாதம் ரூ.5152 கிடைத்திருக்கும். ஆனால் தற்போது வெளி யிட்டுள்ள கணக்கீட்டின்படி ரூ.3455.31 பைசா மட்டுமே கிடைக்கும். அகவிலைப்படியை குறைத்ததன் மூலம் ஒரு தொழிலாளிக்கு சரா சரியாக மாதம் ரூ.1700 வீதம் குறைகிறது. பல லட்சம் தொழிலாளர்களுக்கு இதுபோல் குறையும் இது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல ரத்து செய்ய வேண்டும்.. முதல்வருக்கு கடிதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமி ழக முதல்வருக்கும், தொழிலாளர் துறை அமைச்சருக்கும் தொழிலாளர் துறை செய லாளர், தொழிலாளர் துறை ஆணையர் ஆகி யோருக்கும் கடிதம் அனுப்புவதோடு, திருப் பூர் மாவட்ட அமைச்சர், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை கடிதம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு எதி ராக போடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஊதிய புதிய அரசாணையால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தொழிலா ளர்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக, ஒரு லட்சம் துண்டறிக்கை அச்சடித்து திருப் பூர் மாவட்ட முழுவதும் தொழிலாளிகளிடம் விநியோகம் செய்வது, மார்ச் 18 ஆம் தேதி அன்று அனைத்து சங்கங்களின் முன்னணி ஊழியர்கள் பங்கு பெறுகிற ஊழியர் கூட் டத்தை நடத்துவது,அந்தக் கூட்டத்தில் அடுத் தகட்ட தொடர் நடவடிக்கை குறித்து திட்டமி டுவது என்றும் அனைத்துத் தொழிற்சங்கங் கள் முடிவு செய்துள்ளன.