சர்வதேச கிரிக்கெட் உலகில் 1992 முதல் 2011-ஆம் ஆண்டு வரை சுமார் 19 ஆண்டு சுழற்பந்து வீச்சு துறையில் முடிசூடா மன்னனாக வலம் வந்த இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்கும் படி புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 47 வயதாகும் முத்தையா முரளிதரன் ஆளுநர் பதவியை ஏற்பாரா இல்லை நிராகரிப்பாரா என்பது இந்த வாரத்துக்குள் தெரியவரும்.