tamilnadu

சிறுமியை துன்புறுத்திய வழக்கில் இளைஞர் கைது

அவிநாசி, மே 26-பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தில் சிறுமியை துன்புறுத்திய வழக்கில் இளைஞர் சனியன்று கைது செய்யப்பட்டார்.அவிநாசி வட்டம், கணக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன்(25). இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை அச்சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் கண்ணனை கைது செய்தனர். 

;