tamilnadu

img

ஒகேனக்கல் வனப்பகுதியில் வாலிபர் சுட்டுக்கொலை

பென்னாகரம், மே 2-ஒகேனக்கல் வனப்பகுதியில் சிறுமியோடு பேசிக்கொண்டிருந்த வாலிபர் மர்ம நபர்களால் புதனன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஜருகு காமத்தை அடுத்துள்ள குரும்பட்டி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகன் முனுசாமி (25). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முனுசாமி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனதுஅக்காள் மகளுடன் ஒகேனக்கல் சுற்றுலா வந்துள்ளார். பிறகு மாலை வீடு திரும்பும் வழியில் ஒகேனக்கல்லில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணப்பட்டி என்னும் இடத்தில் இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியால் முனுசாமியின் மார்புப் பகுதியில் சுட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே முனுசாமி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சிடையந்த சிறுமி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வனப்பகுதியில் சென்று மறைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு சுற்றுலா வந்தவர்களிடம் தகவல் தெரிவித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துஉள்ளனர். காவல் துறையினர் அங்குசென்று முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் துணை கண்காணிப்பாளர் மேகலா ஆகியோர் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;