tamilnadu

img

ஏற்காடு: பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

 ஏற்காடு, மார்ச் 16- சேலம் மாவட்டம், ஏற்காட்டில், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைப்பெற்றது. ஏற்காடு ஒன்றிய நிர்வாகம் சார்பில், பி.டி.ஓ. குணசேகர் தலைமையில் பணியாளர்கள், ஏற்காடு பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் கை வைக் கும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பேருந்துகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பேருந்து பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, டாக்சி, ஆட்டோ ஸ்டேன்ட் மற்றும் தியேட்டரில் கொரோணா பரவாமல் தற்காத்துக் கொள்வ தற்கான நடவடிக்கைகளான, கைகளை சுத்தமாக கழுவு தல், முக கவசங்கள் அணிந்து கொள்ளுதல், துணி வைத்து இருமுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறி விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.