tamilnadu

img

திருப்பூரில் உலக சுற்றுலா தினம் மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி

திருப்பூர், செப். 27 - உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வெள்ளியன்று திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் மாணவிகளுக்கான இலக்கியத் திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுற்றுலாவும், வேலைவாய்ப்பும் என்ற தலைப்பிலும், அனைவ ருக்கும் சிறந்த எதிர்காலம் என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டியும், கட்டு ரைப் போட்டியும் நடத்தப்பட்டன. இதில் 350 மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்குத் தேர்வு கள் இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் மணிவண்ணன் புத்தகங்கள் பரிசளித்துப் பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியை மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் பா.செல்வராஜ்  ஒருங்கிணைத்தார். ஜெய்வாபாய் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை, தமிழாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்க ளும் பங்கேற்றனர்.