சேலம், நவ.30- உலக சிக்கன நாள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக சிக்கன நாள் கடை பிடிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத் தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப் பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 30- ஆம் நாள் உலக சிக்கன நாளாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதற் கேற்ப எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பா கவும், இனிமையாகவும் அமைந்திட, சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் தங்களது சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, தேவையற்ற செலவுகளை தவிர்த்தல், சமூகத் தீமை களில் ஈடுபட்டு பொருளழிவிற்கு வகை செய்யாதிருத்தல் ஆகிய நல்ல பழக்கங் களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சேலம் மாவட்டமானது 2019-20- ஆம் நிதியாண்டில் அக்டோபர் 2019 வரை அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ. 964.19 கோடி மொத்த வசூல் எய்தியுள்ளது. உழைத்து ஈட்டிய பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பாதுகாப்பற்ற தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமா றாமல் தமிழ்நாடு அரசின் சிறுசேமிப்புத் துறையும், மத்திய அரசின் அஞ்சலகத் துறையும் இணைந்து செயல்படுத்துகின்ற ரூ.100 என்ற பாதுகாப்பான அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் அனைத்து தரப்பு பொது மக்களும் முதலீடு செய்து தங்கள் வாழ்வில் பொருளாதாரப் பாதுகாப்புடன் வளம் பெற்றிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) மு. முரளிதரன், சிறுசேமிப்பு முகவர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண் டனர்.