கோவை, மார்ச் 1- வால்பாறையை அடுத்த அய்யர்பாடி எஸ்டேட் பகுதி யில் உள்ள வனப்பகுதியில் தீ பிடித்து பல ஏக்கர் வனம் எரிந்து நாசமாகின. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த அய்யர் பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நள்ளி ரவில் மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால், பரவிய காட்டு தீயால் அப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகின. தொடர்ந்து நீடித்த காற்றால் வனம் முழுவ தும் மளமளவென தீ பரவியது. இதனால் பல ஏக்கர் வனப்ப குதி எரிந்து சாம்பலானது. அப்பகுதியில் இருந்த விலங்கு கள் மற்றும் பறவைகள் அங்கிருந்து தப்பித்து ஓடின. தொடர்ந்து விடிய, விடிய எரிந்த தீயால் அப்பகு தியில் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை வனப்பகுதிகள் கோடை மழையின்றி மற்றும் வெயிலால் மரம், செடி, கொடி கள் கயாந்து வருகிறது. வழக்கமாக பிப்.2வது அல்லது 3வது வாரம் பெய்யும் கோடை மழை பொய்த்ததால் வனம் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனத்தையொட்டியுள்ள குடியுருப்புப் பகுதி களுக்குள் வன விலங்குகள் தஞ்சம் அடைந்துவருவ தால் மர்மநபர்கள் வனப்பகுதிகளில் தீ வைத்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.