tamilnadu

img

நவமலையில் குடியிருப்புகளை சூறையாடிய காட்டு யானை

பொள்ளாச்சி, ஜூலை 23- பொள்ளாச்சி அடுத்த நவமலையில் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து அடுத் தடுத்த நாட்களில் 2 மனித உயிரிழப் புகளை ஏற்படுத்திய காட்டு யானை, மீண்டும் அப்பகுதியில் புகுந்து  இரண்டு குடிசை வீடுகளை சூறையாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள் ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த நவமலை வன கிராமத் தில் 45க்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் குடும்பங்கள் பல ஆண்டு களாக வசித்து வருகின்றனர். கடந்த மே 25 மற்றும்26 ஆம் தேதிகளில் அக் குடியிருப்பில் புகுந்த யானை ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா (7) மற்றும் மாகாளி(56) ஆகியோரை மிதித்து கொன்றது. இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் தொடர் தலையீட்டின் காரணமாக வனத்துறையினர் 2 கும்கி யானை களை கொண்டு வந்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.  இந்நிலையில், செவ்வாயன்று அதி காலையில் 3.30 மணியளவில் அப்பகு திக்கு அதே காட்டு யானை மீண்டும் வந்தது. கடந்த முறை மிதித்து கொன்ற மாகாளியின் வீட்டினை  மீண்டும் தாக்கி சூறையாடியது.  மாகாளியின் உயிரிழப்பிற்குப்பின் னர் அவரது மனைவி ஏசம்மா(52) மற் றும் அவரது மகள் ஜெயப்ரியா (22),  ஆனந்த் (24)  ஆகியோர் யானைக்கு பயந்து இரவில் வீட்டில் தங்குவ தில்லை. இதனால் இம்மூவரும் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள காளியப்பன் (56)  என்பவரது வீட்டையும் தாக்கி, கடுமையாக சேதப் படுத்தியது. உயிர் பயம் காரணமாக அவரது வீட்டிலும் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். இதனை யடுத்து வனத்துறையினருக்குத் தக வல் தெரிவித்தனர்.4.30 மணியளவில் வனத்துறையினர் நவமலை பகுதிக்கு சென்றனர்.அதற்குள் யானை அங்கி ருந்து வனத்திற்குள்சென்றுவிட்ட தாகத் தெரிகிறது. இதன்பின் கோவை மாவட்ட வன அலுவலர் மாரியப்பன் செவ்வாயன்று நவமலை பகுதிக்குச் சென்று மலை வாழ் மக்களிடம் யானை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- யானையை முழுமையாக விரட்டும் வரை அல்லது அதனைப் பிடிக்கும் வரை நவமலை பகுதி மலைவாழ் மக்களின் பாதுகாப்பாக பழையபடி மின்வாரிய குடியிருப்புகளில் தங்க வைக்கநடவடிக்கை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், நவமலை வனப் பகுதிகளில்சூரிய மின் வேலி அமைக்க படுமெனவும், நவமலை பகுதி மலை வாழ் மக்களுக்கு வருவாய்த் துறையின் மூலமாக மாற்று இடம்  வழங்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகி றோம் எனவும் கூறினார்.