தொடர்புடைய அரசியல் புள்ளிகள் யார் - இரா.முத்தரசன் கேள்வி
கோவை, பிப். 10- அன்புசெழியன் வீட்டில் பிடிபட்ட பணம் யாருடையது, அதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் யார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, கோவையில் திங்ள களன்று செய்தியாளர்களை சந்தித்த இரா. முத்தரசன் கூறுகையில், அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத் திய சோதனையில் 300 கோடி ரூபாய் ரொக்கமும் சில ஆவணங்களும் கைப்பற்றப் பட்டது. இதில் அந்தப் பணம் தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகள் பணம் என்று சில அரசியல் புள்ளிகளின் பெயர்கள் அடிப டத்தொடங்கி உள்ளது. இதை வருமான வரித்துறை கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் தான் நடைபெற்றுக்கொண் டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதி ராக நாடு முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள், பேரணி என்று நடக்கிற பொழுது காவல்துறையால் அனுமதி மறுக்கப்படுகி றது. இதுபோன்ற அடக்கு முறைகள் தமி ழகம் முழுவதும் நடைபெற்று வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையை மறுக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். சேலத்தில் அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகு தியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்ட லமாக அறிவித்திருக்கிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம். அதே கூட்டத்தில் அரசி யலும் பேசுவது மரபு அல்ல, நாகரிகமும் அல்ல என்றார்.
மேலும், காவிரி டெல்டா பகுதியை விவசாய மண்டலமாக அறிவித்திருப்பது காலம் கடந்த அறிவிப்பாக இருந்தாலும், அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற் கிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறி உள்ளதோடு, மத்திய அரசு அனுமதி வழங் கியிருக்கிறது. அந்த மத்திய அரசின் அனு மதி ரத்து செய்யப்படுமா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறவேண்டும். இதுகுறித்து தமிழக சட்டமன்றக் கூட் டத் தொடரில், தமிழக அரசு இந்த தீர் மானத்தை முன்மொழிந்து அதை சட்ட மாக நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், எஞ்சிய ஒன்பது மாவட்டங்க ளுக்கும், அதேபோல நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் தேர்தல் விரைந்து நடத் தப்பட வேண்டும். அதை நடத்தாமல் காலம் தாழ்த்தி எஞ்சிய காலத்தையும் கடத்தி விடு வார்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது. தொடர்ந்து சாதியம், வகுப்புவாதம் மூடநம்பிக்கைகள் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் கருப்பு, நீலம், சிவப்பு எல் லோரும் சேர்ந்து போராடுவது வரவேற்கத் தக்கது. அதற்கான முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். வரு மான வரித்துறை பாஜகவின் ஒரு அமைப்பு போல் செயல்படுகிறது. இந்த அமைப்பு சிலரை பணியவைக்க பயன்படுத்தப்படு கிறது . இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செய லாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தேவராஜ், சி.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.