கோவை, ஆக. 29- பெண்ணை வீடு தேடிச் சென்று தாக்கு தல் நடத்திய ஆளுங்கட்சியினர் மீது வழக் குப்பதிவு செய்யாமல், நியாயம் கேட்கச் சென்ற பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரை ஏசிசி சிமெண்ட் நிறு வனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகை யால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் குற் றஞ்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆளுங் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காயத் திரி என்ற பெண்ணை வீடு தேடிச் சென்று கடு மையாக தாக்கினர். இதனையடுத்து அவரை தாக்கி மிரட்டல் விடுத்த அதிமுக வினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண் டும் என வலியுறுத்தி மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகாரைப் பெற்றுக்கொண்டு மதுக்கரை காவல் துறையினர், புகார் தெரிவித்த 50 பெண்கள் மீது தற்போது பொது ஊரடங்கு விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், அதிமுகவினர் எங்கள் தெருவில் வந்து காயத்திரியை தாக்கியதைதும், பின்னர் எங் களை மிரட்டியதைதும் உரிய ஆதாரத் தோடு காவல் நிலையத்தில் புகார் அளித் தோம். ஆனால், எங்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை சம்பந்தப்பட்ட ஆளுங் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க மறுக் கிறது என குற்றஞ்சாட்டினர்.