tamilnadu

img

தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி, மே 30-அவிநாசி அடுத்த தெக்கலூரில் பெய்த மழை நீர்  ஆங்காங்கே தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  தெக்கலூர் ஊராட்சியில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தெக்கலூர் புறவழிச் சாலையை அருகிலிருந்து கருவலூர் செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் தேங்கி கிடக்கிறது. இதேபோல் தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடுமையான மழை பெய்தால் சாலைகளில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள், வேலை செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   மேலும் இச்சாலையில் தரைமட்ட பாலம் கட்டப்பட்டு தண்ணீர் வெளியேறுவதற்காக வழி வகை செய்யப்படவில்லை.  எனவே, மழைநீரை தேங்காமல் இருக்க இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.