திருப்பூர், ஜூலை 19 - அவிநாசி ஒன்றியம் திரு மலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி சத்து ணவு சமையலர் பாப்பாள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன் கொடுமைக்கு எதிராக வழக்கை நடத்துவதில் அரசு நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப் பிடிப்பதைக் கண்டித்து தீண்டா மைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் போராட்டம் நடைபெற்றது. இது பற்றிய விபரம் வரு மாறு: கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமைய லராக பணியமர்த்தப்பட்ட பாப்பாள் மீது, உள்ளூரைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகள் சிலர், சத்துணவு சமைக்கக் கூடாது என்று அரசு அலுவலர் களை நிர்ப்பந்தித்து தீண்டாமைக் கொடுமை நிகழ்த்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரி யாரிய அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் அவர்கள் மீது, பட்டியல் சாதியினர் / பழங் குடியினர் வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டத்தின்படி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், குற்றப் பத்தி ரிக்கை தாக்கல் செய்யவும் ஓராண்டு காலத்தை காவல்துறை எடுத்துக் கொண்டது. அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பா ளர் பரமசாமி இவ்வழக்கின் விசாரணை அலுவலராக இருந் தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என ஏற்கனவே கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தியும் அக்கோரிக்கை கண்டுகொள்ளப் படவில்லை. தற்போது ஓராண்டுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக் கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மட்டுமின்றி, பல்வேறு வழக்குகளிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே, சாதிய வன் கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் மாவட்ட நிர்வா கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வெள்ளியன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராம கிருட்டிணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செய லாளர் ச.நந்தகோபால், தலித் விடுதலைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகுந்தலா தங்கராஜ், காட்டாறு இதழ் குழு சார்பில் செந்தில்குமார், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைச் செயலாளர் விடுதலைச் செல்வம், தமிழ்ச் சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் அகத்தியன், சசி மனிதஉரிமை செயற்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், தேசிய சிறுத்தைகள் கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளானோர் இந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது நன்றி கூறினார்.