tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

தருமபுரி, டிச.15- தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள் ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று நடைபெற்றது. தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட இலக் கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் பணி யாற்றவுள்ள அலுவலர்களுக்கான பயிற் சியை மாவட்ட  ஆட்சியர் எஸ்.மலர்விழி  நேரில் பார்வையிட்டு, தேர்தல் நடத்தை விதி கள், தேர்தலை எவ்வாறு சுமூகமாக நடத் துவது குறித்து விளக்கினார். பாலக்கோடு பகுதியில் நடைபெற்று வரும் பயிற்சிகளை யும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோன்று அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பயிற்சி வகுப்புகளை சார் ஆட்சியர் பிரதாப் நேரில் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி மாவட் டத்தில் 10 இடங்களில் நடைபெற்ற பயிற் சியில் 13 ஆயிரத்து 595 பேர் கலந்து கொண்டனர்.