tamilnadu

img

வாட்டர் ஏடிஎம் சரி செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உதகை,பிப்.11- உதகையில் உள்ள சுற்றுலா பகுதி ஒன்றில் வாட்டர் ஏடிஎம் பழுதடைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை கூடலூர் செல்லும் சாலை யில் அமைந்துள்ளது 9 வது மைல். இது ஒரு சுற்றுலாத் தலமாகும். இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்படும். நீலகிரி மாவட் டத்தில் தற்போது பாட்டிலில் விற்கப்படும் குடிநீருக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதற்கு மாற்றாக மக்கள் கூடும் இடங்களில் வாட்டர் ஏடிஎம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், இங்கு உள்ள வாட்டர் ஏடிஎம்மிற்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து விட்டது. இதனை கடந்த  ஒரு வார காலத்திற்கு மேலாக சரி செய்யப்படாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல்  அவதி அடைந்து வருகின்றனர்.எனவே இதை சரிசெய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.