tamilnadu

பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனை செய்திடுக மாநகராட்சி ஆணையர்

கோவை, நவ.16- பண்டிகை காலங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பி வந்தவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாநகராட்சியின் தீவிர கொரோனா தடுப்பு  நடவடிக்கைகளினாலும், பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்கியதாலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், நோயின் தாக்கத்தை கண்கா ணிக்கும் பொருட்டு, தீபாவளி பண்டிகை முடிந்து வெளி யூர்களில் இருந்து வரும் நபர்களில் காய்ச்சல், இருமல், சளி மற்றும் நோய் அறிகுறி உள்ளவர்கள் பேருந்து நிலை யங்களில் பரிசோதனை செய்திட சிறப்பு முகாம் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.  இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு நோய்  அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக பரிசோ தனை செய்து கொள்ளுமாறும், சளி மாதிரி கொடுக்கப் பட்ட நபர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்களை  தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.  மேலும், வெளியூர்களுக்குச் சென்று திரும்பி யவர்களுடன் வீட்டிலோ, அல்லது பணிபுரியும் இடங்க ளிலோ தொடர்பில் இருந்தவர்கள், இருப்பவர்கள் தாங்களா கவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அச்செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.