tamilnadu

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

கோவை, ஜூலை 16- கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த  மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமியை திரு மணம் செய்து கொள்வதாக  ஆசைவார்த்தைக் கூறி, தனது நண்பரின் வீட்டிற்கு கடத்தி சென்றுள்ளார். இதனிடையே தங்களது மகளை காணாதாதல் அதிர்ச்சிக்குள்ளான, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக காவல்நிலையத் தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார்  மணிகண்டனை கைது செய்தது டன் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் மணிகண்டன் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 

;