ஏற்காடு, டிச.13- ஏற்காட்டில், ஏடிஎம்-யில் சிக்கி கிடந்த ரூ.5 ஆயிரத்தை இளைஞர் ஒருவர் காவல் துறையி னரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டம், ஏற் காடு, லாங்கில் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ் மோகன் (28). இவர் வியாழ னன்று மாலை ஏற்காடு தபால் அலுவலகம் அருகில் உள்ள பேங்க ஆஃப் இந்தியா ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் ஏற்கெனவே ரூ.5 ஆயிரம் சிக்கி கொண்டிருந்துள்ளது. ராஜ்மோகன் அந்த பணத்தை எடுத்து ஏற்காடு காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் ரகு விடம் ஒப்படைத்தார். இதுபோல, இந்த ஏடிஎம்-யில் ஏற் கெனவே இருமுறை பணம் சிக்கியிருந்து, அதை எடுத்தவர்கள் ஏற்காடு காவல் நிலை யத்தில் ஒப்படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.