tamilnadu

சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டாலும் கூலி என்னவோ ரூ.100 தான்

துப்புரவு தொழிலாளி, தூய்மைக் காவலர், சுகாதார பணியாளர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இத்தொழிலா ளர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரமான பணி என்றாலும் இத்தொழிலாளர்களுக்குப் பணி   நிரந்தரமில்லை. தினக்கூலி, ஒப் பந்தக்கூலி, சுய உதவிக்குழு என்ற அடிப்படையில் உள் ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணி நடைபெறுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டப் பணியாளர் களுக்குத் தான் தூய்மைக் காவலர்கள் பணி வழங்கப் படுகிறது. சுமார் 5 ஆயிரம் மக்கள்  தொகை கொண்ட கிராமத்தில் 3 பேர்தூய்மைக் காவலர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒன்றியத்தில் 100 பேர் வரை தூய்மைக் காவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்தும் இத்தொழிலாளர்களுக்கு வழங் கப்படும் கூலி வெறும் ரூ.100  தான். வட்டார வளர்ச்சி  அலுவலகத்திலிருந்து கிராம ஊராட்சி மூலம்  இத்தொழிலா ளர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஒன்றுக்கு ரூ.2600 மட்டுமே சம்பளமாக செலுத்தப்படுகிறது. எந்த திருவிழா காலமா னாலும், விடுமுறை தினம் என்றா லும் இவர்களுக்கு விடுமுறை இல்லை.மார்ச்24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந் தாலும் தூய்மை பணியாளர் களுக்கு ஊரடங்கு தடை இல்லை  கொரோனா வைரஸ் தடுப்பு பணி என்ற அடையாள அட்டை யுடன் மக்கள் வசிக்கும் பகுதி களிலும்,மருத்துவமனை களிலும் இவர்கள் பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது. வட்டார வளர்ச்சி அலுவல கங்கள் மூலம் கிராம ஊராட்சி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் தூய்மைக் காவலர்களுக்கு கூலியைக் கொடுக்கிறது.

கூலி மிகக் குறைவாக உள்ளது எனக்  கேட்டால் வேறு ஆள் போட்டுக் கொள்கிறோம் என மிரட்டல் விடுக்கின்றனர். இந்நிலையில் விழித்திரு, தனித்திரு, விலகி இரு என்ற முதல்வர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் தூய்மைப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்படும் என சட்டமன்றத்தில் அறி வித்தார். தொழில், வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் ஆயிரம் ரூபாய் நிவா ரணம் மற்றும் உணவு பொருட் கள் வழங்கப்படும் என   அறிவித் தது. நலவாரியங்கள் மூலமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்தொழிலாளர் களுக்கு அரசு அறிவித்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. ஊதியமும் மிகக் குறைவாக வழங்கப்படுகிறது.

 கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவி லியர்களுக்கே அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் வழங்கவில்லை  எனக் கூறப்படுகிறது. வழக் கமான மாதாந்திர ஊதியமே சிலருக்கு வழங்கப்படாத நிலை யில் தூய்மை காவலர்கள் சிறப்பு ஊதியம் வழங்கப்படுமா என சந்தேகம்  எழுந்துள்ளது. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அகதி களைப் போல நெடுஞ்சாலை களிலும், ரயில் பாதையிலும் மூட்டை, முடிச்சுகளுடன் குழந் தைகளை தூக்கிக் கொண்டு  செல்லும் புலம் பெயர்ந்த தொழி லாளர்களைப் போல ஊசி முனையில் வாழ்ந்து கொண்டுள் ளனர். ஒரு மனித உயிரையும் இழக்க மாட்டோம் எனும் அரசு, தூய்மைக் காவலர்களின் நல னில் கவனம் கொள்ளுமா! -ராஜ்வேல்