tamilnadu

img

நடுரோட்டில் சாயக்கழிவுநீர் தொட்டி கட்டியுள்ள பிரிண்டிங் நிறுவனம்: குடியிருப்பு மக்கள் கடும் அதிருப்தி

திருப்பூர், மார்ச் 6 - திருப்பூர் முதலாவது மண்டலத் தில் குடியிருப்புப் பகுதியில் சாயக் கழிவுநீரை பகிரங்கமாக வெளியேற்று வதற்கு  பொது மக்கள் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 12ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் நூற்றைம்பதுக்கும் மேற் பட்ட வீடுகளில் சுமார் 700 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் ரோட்டரி பிரிண்டிங் ஆலை ஒன்று பல ஆண்டு காலமாகச் செயல் பட்டு வருகிறது. இந்த ஆலை நிர்வா கத்தார் ஜவஹர் நகரின் தென்புறம் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய பொதுச் சாலையின் நடுவே பெரிய அளவுக்கு தொட்டி ஒன்றை கட்டியுள் ளனர். அத்துடன் ரோட்டரி பிரிண்டிங் கில் பயன்படுத்தப்படும் ரசாயனங்க ளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரித்து இந்த தொட்டி வழியாக நிலத்தடியில் வெளியேற்றும் வகை யில் ஏற்பாடு செய்துள்ளனர்.  பொதுச் சாலையாக இருந்தாலும் இப்பகுதி வழியாக வரும் நுழைவுப் பகுதியை தனியார் நிறுவனத்தார் கற்களை வைத்து தடை ஏற்படுத்தி வைத்திருப்பதாகவும், எனவே பொது மக்கள் கவனத்துக்கு வராதபடி இந்த ஏற்பாடு மறைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என இப்பகுதி பொது மக்கள் கூறினர். எனினும் தற்போது இந்த அப்பட்டமான விதிமீறல் தெரிய வந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் விதிமீறல் குறித்து குடியிருப்போர் நலச் சங்கத் தினர், பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆட்சி யர் பரிந்துரைத்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவது நிறுத்தப் பட்டது. அங்கு  உற்பத்தியாகும் சாயக் கழிவுநீரை லாரி மூலம் இங்கிருந்து வேறு பகுதிக்குக் கொண்டு சென்ற னர் என்று மக்கள் கூறினர். ஆனால் மீண்டும் தற்போது இந்த ஆலை நிர்வாகத்தார் பொதுச் சாலையில் பகிரங்கமாகத் தொட்டி கட்டி அதில் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஏற்பாடை செய்தி ருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரடியாக கள ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். ஏற்கெனவே ஆட்சியர் கவனத் திற்குச் சென்று நடவடிக்கை எடுக் கப்பட்ட நிலையிலும், மறுபடியும் இதுபோல் சட்ட விதிமீறலில் ஈடுபட்டு பொது மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த தனியார் ஆலை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இப்பிரச்சனைக்கு நிரந் தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜவஹர் நகர் மக்கள் வற்புறுத் துகின்றனர்.